இரண்டாம் கட்டமாக வெள்ளலூர் ராஜவாய்க்காலில் இருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்



கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட ஆத்துப்பாலம், அணைமேடு மற்றும் உக்கடம் பெரியகுளம் தெற்கு கரை பகுதிகளில் சுமார் 75 ஆண்டுகளாக நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 537 வீடுகள் காவல்துறையினர் உதவியுடன் கடந்த செப்டம்பர் 12ம் தேதியன்று அகற்றப்பட்டன. இதில் அணைமேடு I – 71 வீடுகள், அணைமேடு II – 276 வீடுகள், துர்கா காலனியில் 7 வீடுகள், அண்ணா காலனியில் 56 வீடுகள், முத்து காலனியில் 64 வீடுகள், சேரன் நகரில் 53 வீடுகள் அகற்றப்பட்டன. 



அதனைத் தொடர்ந்து, மீதமுள்ள ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கும் வகையில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் அப்பகுதி மக்களை வெள்ளலூர் பகுதியில் குடியேற்றம் செய்து இன்று (செப்டம்பர் 21) காலை ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள வீடுகளை இடிக்கும் பணியை துவங்கினர்.

இரண்டாம் கட்டமாக துவங்கப்பட்டுள்ள இப்பணி தொடர்ந்து நாளையும் நடைபெறும் என்றும் இதில், வெள்ளலூர் ராஜவாய்க்காலில் மீதமுள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



இதில், ஆக்கிரமிப்பு நிலங்களான நஞ்சுண்டாபுரம் இட்டேரி - 280 வீடுகள், வெள்ளலூர் ராஜவாய்க்கால் - 39 வீடுகள், ஆத்துமேடு நஞ்சுண்டாபுரம் - 66 வீடுகள், அண்ணாநகர் பீளமேடு - 219 வீடுகள், குளத்து ஏரி அண்ணன் அண்ணாநகர் - 32 வீடுகள், அண்ணாநகர் ஒண்டிபுதூர் - 66 வீடுகள், கோத்தாரி லே-அவுட் - 30 வீடுகள், ஆட்டோ டிரைவர் காலனி - 121 வீடுகள் என மொத்தம் 853 ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றவுள்ளனர்.

இதனிடையே, கோவையில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதை அடுத்து அங்குள்ள மக்களுக்கு மாற்று வீடுகள் ஒதுக்கப்பட்டு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.



முன்னதாக, கோவையில் நீர்நிலைகள் அழிந்து வருவதாகவும், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் வலியுறுத்தி வந்தனர். அதனைத்தொடர்ந்து தற்போது மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதை முன்னிட்டு குடிசை மாற்று வாரிய அதிகாரிகளுக்கும், மாநகராட்சி அதிகாரிகளுக்கும், பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் நன்றிகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...