நீலகிரியில் நீர்சேகரிப்பு கட்டமைப்பு பணிளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

வேளாண் பொறியியல்துறை சார்பில் சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2016-2017 ஆம் ஆண்டில் காட்டேரி நீர்பிடிப்பு பகுதியில் செயல்படுத்தப்பட்ட பணிகளையும், கேத்தி பகுதிக்குட்பட்ட கெக்கட்டி கிராமத்தில் ரூ.6 லட்சம் மதிப்பில் நீர்சேகரிப்பு கட்டிடம் கட்டப்பட்டது. 

இதேபோல, அதிகரட்டி, கொலாணிமட்டம் பகுதியில் ரூ.6 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட நீர்சேகரிப்பு கட்டமைப்பு பணிகளையும், செல்வி நகர் பகுதியில் ரூ.6 லட்சம் மதிப்பிலான நீர்சேகரிப்பு கட்டமைப்பு பணிகள் நிறைவடைந்தன.இதன் மூலம் விவசாய பெருங்குடி மக்கள் பெரும் பயனடைந்துள்ளனர்.

இந்நிலையில், வேளாண் பொறியில் துறை சார்பில் மொத்தம் ரூ.18 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட நீர்சேகரிப்பு கட்டமைப்பு பணிளை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார். அப்போது, பழங்குடியின மக்களின் குறைகளையும், கோரிக்கைகளையும் கேட்டறிந்தார். 



பழங்குடியின கிராமமான உலிக்கல் பேரூராட்சி ஆனைப்பள்ளம் மற்றும் சின்னாளக்கொம்பை பகுதி பழங்குடியின மக்களின் முக்கிய தேவைகளான சாலைவசதி, பகுதிநேர நியாய விலைக்கடை, தண்ணீர் வசதி, வீட்டுமனைப்பட்டா, பழுதடைந்த வீடுகள் ஆகியவற்றை விரைவில் சரி செய்து தருவதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உறுதியளித்தார். மேலும், பழங்குடியின மக்களின் குறைகளையும், கோரிக்கைகளையும் நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு துறைச் சார்ந்த அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார். 

இந்நிகழ்வின்போது மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கலைமன்னன், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் (பொறுப்பு) பிரபு, உதவி பொறியாளர் பூபாலன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர். 

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...