நீலகிரியில் நீர்சேகரிப்பு கட்டமைப்பு பணிளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

வேளாண் பொறியியல்துறை சார்பில் சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2016-2017 ஆம் ஆண்டில் காட்டேரி நீர்பிடிப்பு பகுதியில் செயல்படுத்தப்பட்ட பணிகளையும், கேத்தி பகுதிக்குட்பட்ட கெக்கட்டி கிராமத்தில் ரூ.6 லட்சம் மதிப்பில் நீர்சேகரிப்பு கட்டிடம் கட்டப்பட்டது. 

இதேபோல, அதிகரட்டி, கொலாணிமட்டம் பகுதியில் ரூ.6 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட நீர்சேகரிப்பு கட்டமைப்பு பணிகளையும், செல்வி நகர் பகுதியில் ரூ.6 லட்சம் மதிப்பிலான நீர்சேகரிப்பு கட்டமைப்பு பணிகள் நிறைவடைந்தன.இதன் மூலம் விவசாய பெருங்குடி மக்கள் பெரும் பயனடைந்துள்ளனர்.

இந்நிலையில், வேளாண் பொறியில் துறை சார்பில் மொத்தம் ரூ.18 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட நீர்சேகரிப்பு கட்டமைப்பு பணிளை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார். அப்போது, பழங்குடியின மக்களின் குறைகளையும், கோரிக்கைகளையும் கேட்டறிந்தார். 



பழங்குடியின கிராமமான உலிக்கல் பேரூராட்சி ஆனைப்பள்ளம் மற்றும் சின்னாளக்கொம்பை பகுதி பழங்குடியின மக்களின் முக்கிய தேவைகளான சாலைவசதி, பகுதிநேர நியாய விலைக்கடை, தண்ணீர் வசதி, வீட்டுமனைப்பட்டா, பழுதடைந்த வீடுகள் ஆகியவற்றை விரைவில் சரி செய்து தருவதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உறுதியளித்தார். மேலும், பழங்குடியின மக்களின் குறைகளையும், கோரிக்கைகளையும் நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு துறைச் சார்ந்த அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார். 

இந்நிகழ்வின்போது மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கலைமன்னன், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் (பொறுப்பு) பிரபு, உதவி பொறியாளர் பூபாலன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர். 

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...