கொத்தடிமைகளாக நடத்தப்படும் வடமாநில தொழிலாளர்கள்- புகாரை ஏற்க மறுக்கும் காவல்துறையினர்

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை கொத்தடிமைகளாக நடத்துவதாகவும், இதுகுறித்து புகார் அளித்தால் காவல்துறையினர் ஏற்க மறுப்பதாகவும் தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் மூவர் கூறியதாவது:-

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த தனேஷ்வர், வினோத்குமார் மற்றும் மகேந்திர குர்கே ஆகிய நாங்கள் மூவரும் கோவை மாவட்டம் கள்ளப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வந்தோம்.

அப்போது எங்களை தொடர்புகொண்ட ஒருவர் அதிக ஊதியத்தில் நல்ல வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி, கோவை இரயில் நிலையம் வருமாறு அழைத்தார்.

இதைத்தொடர்ந்து, எங்கள் மூவரையும் கோவையில் இருந்து ஈரோட்டிற்கு அழைத்துச் சென்று, ஒரு அறையில் அடைத்து வைத்து அடித்து, துன்புறுத்தி பணம் மற்றும் செல்போன்களை பிடிங்கி வைத்துக்கொண்டார். 

மேலும், மூன்று பேரையும் ஈரோடு, ஆத்தூர், உளுந்தூர்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு 3 ஏஜெண்ட்கள் அழைத்து சென்று ஒரு போர்வெல் நிறுவனத்தில் தலா 8 ஆயிரம் ரூபாய் வீதம் கொத்தடிமைகளாக விற்றுவிட்டார். 

அங்கு, முறையாக பணியாற்றவில்லை எனில் உடல் உறுப்புகளை விற்று விடுவோம் என ஏஜெண்ட்கள் மிரட்டுகின்றனர். ஏஜெண்ட்களுக்கு தெரியாமல் மறைத்து வைத்திருந்த செல்போன் மூலம் சத்தீஸ்கர் காவல் துறைக்கு புகார் அளித்தோம். தொடர்ந்து, உளுந்தூர்பேட்டையில் இருந்து உதவி கேட்டு கோவைக்கு தப்பி வந்துள்ளோம்" என்றனர்.

இதுகுறித்து சிஐடியு புலம் பெயர்ந்த தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், கோவை மாவட்டத்தில் வட மாநில தொழிலாளர்கள் தரகர்கள் மூலம் அடிமைகளாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றனர். அதனை தடுக்க அரசும், காவல் துறையும் எந்தநடவடிக்கையும் எடுக்கவில்லை. கொத்தடிமைகளாக விற்க முயன்ற தரகர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக காட்டூர் காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. எல்லையை காரணம் காட்டி காவல் நிலையத்தில் புகாரினை வாங்க மறுத்து வேறு காவல் நிலையம் செல்ல அறிவுறுத்துகின்றனர். மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறை எல்லையை காரணம் காட்டி புறக்கணிப்பது கண்டனத்திற்குறியது" என்றார்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...