கோவையில் முதல் முறையாக ஹெச்.அண்ட் எம். ஆடை அலங்காரக் கடை திறப்பு

ஆடை, அலங்கார விற்பனையகத்தில் சர்வதேச தரம் வாய்ந்த ஹெச் அண்ட் எம் எனப்படும் ஹென்னிஸ் அண்ட் மவுரிட்ஸ் ஏபி, ((H&M), Hennes & Mauritz AB) குறைந்த விலையில் சிறந்த தரத்துடன் பல்வேறு நாடுகளில் தனது கிளைகளை நிறுவியுள்ளது. 

இந்தியா முழுவதும் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் ஹெச்.அண்ட் எம். ஆடை, அலங்கார விற்பனையகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், கோவையில் முதல் முறையாக தனது பாதத்தை பதித்துள்ளது. கோவை, சத்தி சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள ப்ரோஷான் வணிகவளாகத்தில் (Prozone Mall) ஹெச் அண்ட் எம் விற்பனையகம் இன்று (22.09.2017) திறக்கப்பட்டது. 



ஹெச். அண்ட் எம். நிறுவனத்தின் இந்திய மேலாளர் ஜென்னி எய்னோலா மற்றும் பிராந்திய மேலாளர் மிக்கோ அலட்டோலா மற்றும் கடையின் மேலாளர் ஹரிஹரன் ஆகியோர் ரிப்பன் வெட்டி, கடையை திறந்து வைத்தனர். அப்போது, ஏராளமான வாடிக்கையாளர்கள் கடையில் வைக்கப்பட்டிருந்த ஆடை வடிவமைப்புக்களை பார்வையிட்டனர். 

 கடையில் முதல் 3 வாடிக்கையாளக்கு முறையே ரூ.10,000, ரூ.7,000, ரூ. 5,000 மதிப்பிலான பரிசுக் கூப்பன்கள் வழங்கப்பட்டன. ப்ரோஷான் வணிகவளாகத்தில் இரண்டு தளங்களை கொண்ட ஹெச். அண்ட் எம். ஆடை அலங்கார விற்பனையகம் வாரத்தின் அனைத்து நாட்களிலும் காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும். 



இந்தப் புதியக் கடையில் பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் ஆகியோருக்கு புதிய புதிய டிசைன்கள் வந்திருப்பதாக கடையின் மேலாளர்கள் தெரிவித்தனர். 

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...