தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்கிறது - தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத்

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்வதாகவும், தமிழகத்தில் 72 ஆயிரம் கோடி தொழில் முதலீடு பெறப்பட்டு 60 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு இருப்பதாகவும் தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.

கோவையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் தொழில்துறை சார்பாக நடைபெறும்  தொழில் வசதிச் சட்டம் மற்றும் விதிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் வேலுமணி, ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் மற்றும் பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகளும்  கலந்து கொண்டனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எம்.சி.சம்பத், சென்னையில் 267 ஏக்கர் பரப்பளவில் தொழில் பூங்கா அமைப்பதற்கான உட்கட்டமைப்பு வசதிகள் செய்து வருவதாகவும், அங்கு பல நிறுவனங்கள் தொழில் துவங்க முன்வந்திருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் அப்பகுதியில் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொழில் துறையினருக்கான ஆராய்ச்சி நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தொழில் முதலீட்டாளர்கள் மற்றும் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் மற்ற மாநிலங்களை காட்டிலும் முன்னணி மாநிலமாக திகழவதாகவும், தமிழகத்தில் 72 ஆயிரம் கோடி தொழில் முதலீடு பெறப்பட்டு 60 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையடுத்து பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவை பன்னாட்டு விமான நிலைய  விரிவாக்க பணிகள் மற்றும் கோவையில் மெட்ரோ இரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...