கோவையில் தொழிற்நிறுவனங்களை மேம்படுத்துவது குறித்து அமைச்சர் ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதி எம்எல்ஏவும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான எஸ்.பி வேலுமணி தலைமையில் கோவையில் தொழிற்நிறுவனங்களை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில், அதிகாரிகள் மற்றும் முன்னணி இந்திய தொழில்நிறுவனங்களின் கூட்டமைப்பினர் கலந்துகொண்டனர். 

இக்கூட்டத்தில், தொழில்நகரமான கோவையில் தொழிற்சாலைகளை மேம்படுத்தவும், வர்த்தகம் மற்றும் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கச் செய்ய நகர்புற தொழில்சாலைத்துறை அமைச்சர் பெஞ்சமின் மற்றும் தொழிற்சாலைத்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் ஆகியோரை வலியுறுத்த முடிவு செய்யப்பட்டது. 



இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், அவினாசி அத்திக்கடவு குடிநீர் திட்டம் மற்றும் தொழிற்சாலை கட்டமைப்பு மேம்பாடு உள்பட கோவையில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மிகவும் உதவிகரமாக இருப்பதாகவும், தற்போது, வேலைவாய்ப்பு மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. 

மேலும், கோவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பணிகள் தொடர்பாக அரசு, பங்குதாரர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதனால், இந்த விவகாரத்தில் விரைவில் தீர்வு காணப்படும். கோவையில் பல்வேறு திட்டப்பணிகள் தொடங்கப்பட உள்ளது. விரைவில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும். லாரி பட்டறை வேறு பகுதிக்கு மாற்றம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.



Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...