ரத்தநாளத்தில் தையல் போடுதல் மற்றும் கல்லீரல் அறுவை சிகிச்சை குறித்து கே.எம்.சி.ஹெச்சில் பயிலரங்கம்

கல்லீரல் நோய்களுக்கான சிகிச்சைகளை பற்றிய விசேஷ பயிற்சி வகுப்புகளை பொது மருத்துவர்களுக்கும் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கும் நடத்துவது என கே.எம்.சி.ஹெச். (KMCH) கல்லீரல் மையம் முடிவு செய்தது. அதன்படி, 4-வது பயிற்சி வகுப்பு மற்றும் பயிலரங்கு இன்று (23.09.2017) முதல் இரண்டு நாட்களுக்கு நடத்தப்படுகிறது.



பயிலரங்கம் குறித்து கே.எம்.சி.ஹெச். கல்லீரல் மையத்தின் தலைவரும், பயிற்சியின் இயக்குனருமான விவேகானந்தன் கூறுகையில், இரத்த நாளங்களை சேர்த்தல் மற்றும் கல்லீரலை அறுவை சிகிச்சையில் உள்ள நுணுக்கங்கள் ஆகியவை ஒவ்வொரு அறுவை சிகிச்சை நிபுணருக்கும் ஒரு பலவீனமாகவே இருந்து வருகிறது. ஆகவே, அவர்களுக்கு தங்களால் கிடைக்கக்கூடிய பல்வேறு தொழில் நுணுக்கங்களை ஆர்வமுள்ள அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பயிலரங்கமானது, ஜீரண மண்டல உறுப்புகள் அறுவை சிகிச்சை நிபுணர்களையும், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை தமது துறையாக மேற்கொள்ள நினைப்பவர்களையும் மனதில் கொண்டு நடத்தப்படுகிறது. விலங்கு திசுக்களின் நுணுக்கங்கள் மூலம் இந்த பயிற்சியில் பங்கு கொள்வோருக்கு கற்பிக்கப்படும். மேலும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து வரும் நிபுணர்கள் பங்கு கொள்வோருக்கு வழி காட்டுவார்கள்.

முதுகலை பட்டதாரிகளுக்கும் மற்றும் கல்லீரல் அறுவை சிகிச்சையில் ஆர்வம் உள்ள அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கும் இந்த பயிலரங்கம் மிகவும் ஏற்றது. பயிற்சியை முடித்தவர்களுக்கு எத்திகான் (Ethicon) நிறுவனத்தின் சான்று வழங்கப்படுகிறது. 

கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையின் துணை தலைவர் பழனிசுவாமி பேசுகையில், கே.எம்.சி.ஹெச். கல்லீரல் மையத்தின் குழுவில் உள்ள விவேகானந்தன், ராஜீவ் சின்ஹா மற்றும் சோரப் கபூர் ஆகியோரை நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த இளம் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு இப்படி ஒருமேடை அமைத்து கொடுத்ததற்கு பாராட்டுகிறேன். இது போன்ற பயிலரங்குகளையும், மருத்துவ கூட்டங்களையும் நடத்துவதன் மூலம் வளர்ந்துவரும் நிபுணர்களுக்கு பல நுட்பமான சிகிச்சை முறைகளை கற்றுத்தர கே.எம்.சி.ஹெச். கல்லீரல் மையம் முனைப்பாக செயல்படுவது தனக்கு பெருமிதமாக உள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார். 

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...