உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவியருக்கு கட்டுரைப் போட்டி


இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன உந்தும வளாகம், மகேந்திரகிரி சார்பாக அக்டோபர் 4-ம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கட்டுரைப் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில், தமிழகத்தை சேர்ந்த நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்கலாம்.

கட்டுரைப் போட்டியின் தலைப்புகள்:

  • 5-ம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு "அண்டை வெளியில் அந்நிய உலகத்தைத் தேடி.”
  • 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு "பூமியில் வாழுஞ்சூழலற்றுப் போனால்...அடுத்து என்ன?"
  • 11 மற்றும் 12 ஆம் மாணவ, மாணவியருக்கு "இன்னொரு கிரகத்துக்கு இன்ப சுற்றுலா போவாமா.?"


கட்டுரைகள், தமிழ் அல்லது ஆங்கிலத்தில் இருத்தல் அவசியம். இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து அப்படியே சமர்ப்பிப்பவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படமாட்டது. கட்டுரைகள் தெளிவாகவும், திருத்தமாகவும் மாணவ, மாணவியர்களின் கையெழுத்தில் ஏ4(A4) அளவு தாளில் 2,000 வார்த்தைகளுக்கு மிகாமலும், ஒவ்வொரு தாளிலும் ஒரு பக்கம் மட்டும் எழுதியிருத்தலும் அவசியம். 

போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவியர்களின் பெயர், வயது, வீட்டின் முகவரி, தொலைபேசி எண் ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். இந்தக் கட்டுரை தங்களால்தான் எழுதப்பட்டது என்பதை உறுதி செய்ய பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் இருந்து ஒப்புதல் இணைக்க வேண்டும்.

கட்டுரைகள், அக்டோபர் 5 அன்றோ அல்லது அதற்கு முன்பாகவோ, உறையின் மேல் கட்டுரைப் போட்டி எனக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். 

அனுப்ப வேண்டிய முகவரி:

நிர்வாக இயக்குநர், ஐ.பி.ஆர்.எ/ இஸ்ரோ,

மகேந்திரகிரி (அஞ்சல்)

திருநெல்வேலி -627133 

தமிழகம் 

தொலைபேசி எண்: 04637-281210, 283510

தமிழ், ஆங்கிலம் கட்டுரைகளுக்கு தனித்தனியாக முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகள் வழங்கப்படும். போட்டியில் வெற்றி பெற்றவர்களின் விவரங்கள் தனியாக தெரிவிக்கப்பட்டு, அக்டோபர் மாதம் மகேந்திரகிரியில் நடக்கும் உலக விண்வெளி வார விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...