மத்திய மாநில அரசுகளை கண்டித்து, மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கோவையில் பொதுக்கூட்டம்

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் பல்வேறு திட்டங்களை எதிர்த்தும், அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்திற்கு காரணமான நீட் தேர்வுமுறையை ரத்து செய்யவேண்டியும், நீட் விவகாரத்தில் மத்திய மாநில அரசுகளின் செயல்களைக் கண்டித்தும் ஞாயிற்றுகிழமை மாலை உக்கடம் வின்செண்ட் சாலையில் மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.



இக்கூட்டதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, முக்குலத்தோர் புலிப்படையின் தலைவர் கருணாஸ், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு, கட்சி நிர்வாகிகள் மற்றும் ஐநூறுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்துகொண்டனர்.



பொதுக்கூட்டம் தொடங்குவதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த தமிமுன் அன்சாரி, நீட் தேர்வுமுறை ரத்து செய்யப்பட வேண்டும் என்றும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வழியுறுத்தினார்.



மேலும் நவோதய பள்ளிகள் பற்றி எழுப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அவர், 'தமிழகத்திற்கு நவோதயா பள்ளிகள் தேவையில்லை, அரசு பள்ளிகளே போதும்', என்றும் கூறினார்.



Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...