மத்திய மாநில அரசுகளை கண்டித்து, மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கோவையில் பொதுக்கூட்டம்

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் பல்வேறு திட்டங்களை எதிர்த்தும், அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்திற்கு காரணமான நீட் தேர்வுமுறையை ரத்து செய்யவேண்டியும், நீட் விவகாரத்தில் மத்திய மாநில அரசுகளின் செயல்களைக் கண்டித்தும் ஞாயிற்றுகிழமை மாலை உக்கடம் வின்செண்ட் சாலையில் மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.



இக்கூட்டதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, முக்குலத்தோர் புலிப்படையின் தலைவர் கருணாஸ், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு, கட்சி நிர்வாகிகள் மற்றும் ஐநூறுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்துகொண்டனர்.



பொதுக்கூட்டம் தொடங்குவதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த தமிமுன் அன்சாரி, நீட் தேர்வுமுறை ரத்து செய்யப்பட வேண்டும் என்றும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வழியுறுத்தினார்.



மேலும் நவோதய பள்ளிகள் பற்றி எழுப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அவர், 'தமிழகத்திற்கு நவோதயா பள்ளிகள் தேவையில்லை, அரசு பள்ளிகளே போதும்', என்றும் கூறினார்.



Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...