சத்தியமங்கலம், ஆசனூரில் வனச்சுற்றுலா: முன் ஏற்பாடுகள் தீவிரம்

தேசிய புலிகள் காப்பக ஆணையத்தின் விதிமுறைகளுக்குட்பட்ட சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் சுற்றுலாவுக்காக திறந்துவிடப்பட உள்ளது. சத்தியமங்கலம், சுமார்1 லட்சத்து 411 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட வனப்பகுதி. இது ஆசனூர், சத்தியமங்கலம் என இரு வனக்கோட்டங்களாக பிரிக்கப்பட்டு புலிகள் காப்பக விதிமுறைகள்படி செயல்பட்டு வருகிறது.

இந்த காப்பகத்தில் அண்மையில் மேற்கொண்ட கணக்கெடுப்புபடி 75 புலிகள் உள்ளன. தமிழகத்தில் உள்ள பல்வேறு புலிகள் காப்பகத்தில் தேசிய புலிகள் காப்பக ஆணையத்தின் அனுமதியோடு வனசுற்றுலா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது சத்தியமங்கலத்திலும் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. வனப்பகுதியில் 50 கி.மீ தூரம் வரை சுற்றுலா பயணிகளை அழைத்துச் சென்று வனவிலங்குகளை நடமாட்டத்தை பார்த்து ரசித்தல், மலையேறுதல் மற்றும் யானை சவாரி ஆகியவை இடம்பெற உள்ளதாகவும், விரைவில் இத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பவானிசாகர், ஆசனூர், கேர்மாளம், தெங்குமரஹாடா வனப்பகுதி மற்றும் தலமலை வனப்பகுதியில் சுற்றுலாவுக்கு திறக்கப்பட உள்ளது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் சார்பில் வனப்பகுதியில் சுற்றுலாப்பயணிகளை அழைத்துச்செல்வதுக்காக 30 பேர் அமரக்கூடிய இருக்கைகளுடன் கூடிய பிரத்யேக வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆசனூரில் புலி போன்ற உருமைப்பு கொண்ட சுற்றுலா பயணிகள் தங்கும் அறை, வரவேற்பு அறையும் கட்டப்பட்டு அதுக்கு பெயிண்டிங் வேலைகள் நடந்து வருகின்றன. இதேபோல புலிகள் பாதுகாப்பு வலியறுத்தி வனத்துறை சார்பில் பனியன், மரப்பொருள்கள் விற்கப்பட்டும் வருகிறது.

சுற்றுலாவுக்கு முன்பதிவு செய்வதுக்கான ஆன்லைன் வசதி ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில், விரைவில் இத்திட்டம் அமலுக்கு வர உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...