டிசம்பர் முதல் 500-க்கும் மேற்பட்ட ரயில்களின் பயண நேரம் குறைகிறது - ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல்

ரயில்வே அமைச்சராக பியூஷ் கோயல் பொறுப்பேற்ற பின், பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி, வரும் டிசம்பர் மாதம் முதல் தொலைதூரம் செல்லும் ரயில்களின் பயண நேரம் குறைக்கப்படுகிறது. 700 முக்கிய ரயில்கள் ஆய்வு செய்யப்பட்டதில், 500 ரயில்களின் வேகத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

50 எக்ஸ்பிரஸ் ரயில்கள், சூப்பர் பாஸ்ட் ரயில்களாக மாற்றம் செய்யப்படுகிறது. இதனால், தொலைதூர ரயில்களில் பயண நேரம் 2 மணி நேரம் வரை குறைக்கப்பட உள்ளது. 700-க்கும் மேற்பட்ட ரயில்கள், ரயில் நிலையங்களில் நிறுத்தப்படும் நேரமும் குறைக்கப்பட உள்ளது.  இதேபோல, எஞ்சின் மாற்ற எடுத்துக் கொள்ளும் காலம் அரை மணி நேரத்தில் இருந்து 20 நிமிடங்களாகக் குறைக்கப்படுகிறது. 23 ரயில் நிலையங்கள் அதிநவீன ரயில் நிலையங்களாக மாற்றப்படுகின்றன.

சிக்னல்களை சரிபார்த்தல், ரயில்தண்டவாளங்களைப் புதுப்பித்தல், மூன்றாவது வழித்தடத்தை அமைத்தல், பயணிகள் பாதுகாப்பு போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். 12 மாதங்களுக்குள் ஆளில்லாத லெவல் கிராசிங்குகளை ஒழிக்கவும் ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...