கோவை - மங்களூரூவுக்கு புதிய விமான சேவை - ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவிப்பு


கோவையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளை வழங்கி வரும் நிறுவனங்களில் ஸ்பைஸ்ஜெட் விமான சேவை நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனம் கோவையில் இருந்து மேலும் ஒரு புதிய விமான சேவையை அறிவித்திருந்தது. 

அதாவது, கோவையில் இருந்து பெங்களூரூவுக்கும், பெங்களூரூவில் இருந்து கோவைக்கும் விமான சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. வரும் அக்டோபர் 3-ம் தேதி முதல் இந்த விமானப் போக்குவரத்து சேவை தொடங்குகிறது.

அதோடு, ஐதராபாத், கொல்கத்தா, விஜயவவாடா, மும்பை, புனே, மங்களூர், டெல்லி போன்ற நகரங்களின் இணைப்பு விமானங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

செவ்வாய்கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களும் இந்த விமான சேவை இருக்கும் என ஸ்பைஸ்ஜெட் விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது. 

விமான பயண விபரம்:  கோவையில் புறப்படும் நேரம் மாலை 04.05 - பெங்களூரூவுக்கு சென்றடையும் நேரம் மாலை 05.05. இதேபோல, பெங்களூரூவிலிருந்து புறப்படும் நேரம் மாலை 02.50 - கோவைக்கு சென்றடையும் நேரம்  மாலை 03.45. 

புதிய சேவையின் தொடக்க சலுகை விலையாக (ஒரு முறை செல்வதற்கு மட்டும்) ரூ.1949 என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, கோவை மற்றும் மங்களூரூ இடையே அக்டோபர் 4-ம் தேதி முதல் புதிய விமான சேவையையும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது. 

செவ்வாய்கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களும் இந்த விமான சேவை இருக்கிறது. 

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...