அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை கொண்டாடக் கூடாது எனக்கோரி திராவிடர் விடுதலை கழகத்தினர் காவல் ஆணையரிடம் மனு

மதச்சார்பின்மையை உறுதி செய்யும் விதமாக அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கொண்டாடக்கூடாது என்று திராவிடர் விடுதலை கழகத்தினர் கோவை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளனர். 

இது குறித்து திராவிடர் விடுதலை கழகத்தின் புறநகர மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நமது நாடு மதச்சார்பற்றது என்று நமது நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்தின் முகப்புறையே கூறுகிறது. மதச்சார்பின்மை கொள்கைகளுக்கு முரணாக பல்வேறு அரசுத்துறை, பொதுத்துறை வளாகங்களில் மத விழாக்களும், பூஜைகளும் சமீபகாலமாக அதிக அளவில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

முந்தைய காலகட்டங்களில் தமிழக அரசின் உயர் அதிகாரிகள் இது போன்ற மத விழாக்கள் கொண்டாடக்கூடாது என்று உத்தரவிட்டபோதும் தொடர்ந்து மத விழாக்கள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.

எனவே, அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை போன்ற மத வழிபாடுகள் நடத்தக் கூடாது. உங்கள் துறை அலுவலகங்களில் இது போன்ற மத வழிபாடுகளை கடைபிடிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.



இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...