நீலகிரியில் பழங்குடியின மக்களுக்கு வன உரிமைகளுக்கான ஆணைகளை வழங்கினார் மாவட்ட ஆட்சியர்

தமிழக அரசின் சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, வனத்துறை மற்றும் வருவாய்த்துறையின் மூலம் வன உரிமைகளுக்கான ஆணைகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தலைமையில் நேற்று (26.09.2017) நடைபெற்றது. நிகழ்ச்சியில், நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த 493 பழங்குடியினர்களுக்கு வன உரிமைகளுக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். 



அப்போது அவர் பேசுகையில், பழங்குடியின மக்கள் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் உயர வேண்டும் என்ற எண்ணத்தில் அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து, அதை செம்மையாக செயல்படுத்தி வருகிறது. மாடு, ஆடு, மற்றும் தேனீ வளர்ப்பது என பல திட்டங்கள் உள்ளன. மேலும், கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் அனைத்து அரசுத் துறைகளும் இவர்களின் வாழ்வாதாரம் உயருவதற்கு முக்கியத்துவம் கொடுத்து உதவி செய்து வருகின்றனர். இந்த ஆண்டு இம்மாதிரியான திட்டங்களுக்கு ஒரு குழு அமைத்து அதன் மூலம் ஒரு தோட்டம் அமைத்தால், தோட்டக்கலைத்துறையின் மூலம் ரூ.5 லட்சம் நிதி உதவி கிடைக்கும். 

ஒவ்வொரு பழங்குடியின மக்களும் தங்களது குழந்தைகளை நன்றாக படிக்க வைத்து அவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய பாடுபட வேண்டும். ஒவ்வொரு துறையிலும் முன்னேற வேண்டும், மேலும், ஒவ்வொரு வீடுகளிலும் தனிநபர் இல்லக்கழிப்பறை அமைக்க வேண்டும். தமிழக அரசு நிறைய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 

எனவே, பழங்குடியின மக்கள் அனைத்து உதவிகளையும் பயன்படுத்தி கொள்ள வேண்டும். மாவட்டத்தில் சுற்றுசூழலை மேம்படுத்துவதற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவேன். மேலும், பழங்குடியினர்  கிராமங்களுக்கு சென்று ஆய்வு செய்து அங்குள்ள குறைகளையும், அவர்களின் கோரிக்கைகளையும் நிவர்த்தி செய்து தருவேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார். 

இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.அர்ஜூணன், காவல்துறை கண்காணிப்பாளர் திமுரளிரம்பா, மாவட்ட வருவாய் அலுவலர் தெ.பாஸ்கரபாண்டியன், குன்னூர் சட்ட மன்ற உறுப்பினர் சாந்திராமு, வன அலுவலர்கள் ராஜ்குமார், திலீப், மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...