கோவை தனியார் நிறுவனம், நட்சத்திர விடுதிகளில் தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் ஒத்திகை


தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் போது, அந்த தாக்குதலை எதிர்கொள்வது எப்படி? என்றும், தாக்குதலின் போது மக்களை பாதுகாக்கும் வழிமுறை குறித்தும் தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் கோவையில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம், நட்சத்திர விடுதிகளில் ஒத்திகை செய்தனர். 

நேற்று முன் தினம் கோவை வந்த 110 வீரர்கள் ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியில் ஒத்திகையில் ஈடுபட்டனர். தொடர்ந்து, நேற்று மாலை சரவணம்பட்டி பகுதியில் உள்ள மென்பொருள் நிறுவனங்களில் ஒத்திகை செய்து பயிற்சியில் ஈடுபட்டனர்.

கட்டிடங்களில் வைக்கப்படும் வெடிகுண்டுகளை கண்டுபிடித்து அவற்றை எவ்வாறு செயலிழக்க செய்வது என்பது குறித்த ஒத்திகைகளை தொடர்ந்து 7 மணி நேரம் நடத்தினர்.

தேசிய பாதுகாப்பு படையினரின் இந்த ஒத்திகையின் போது உள்ளூர் போலீசார் மற்றும் பத்திரிகையாளர்கள் என யாரும் ஒத்திகை நடக்கும் கட்டிட வளாகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...