தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்



கோவை மாநகர் தெற்கு மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் நேற்று (27.09.2017) மாலை 4.00 மணிக்கு வடகோவை கிராஸ் கட் சாலையில் உள்ள கோவை மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் மாவட்ட அவைத் தலைவர் வெ. நா. பழனியப்பன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ சிறப்புரையாற்றினார். பின்னர், செயற்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.



அதில், வருகின்ற (01.10.2017) ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி அளவில் பீளமேடு விமான நிலையத்திற்கு சென்னையிலிருந்து விமானம் மூலம் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி செயல் தலைவர் மு.க ஸ்டாலின் வருகை தர உள்ளதை மாநகர் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாபெரும் வரவேற்பினை அளிப்பதற்கு மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் அனைவரும் பெரும் திரளாக பங்கேற்று வரவேற்பு வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், திண்டுக்கல்லில் செப்டம்பர் 16 ம் தேதி அன்று நடைபெற்ற முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தில் செயல்தலைவர் மு.க ஸ்டாலின் அறிவிப்பிற்கிணங்க, கோவை மாநகர் தெற்கு மாவட்ட கழகம் கழக நிர்வாகிகள் வீடு வீடாக சென்று லட்சக்கணக்கிலே கழகத்திற்கு உறுப்பினர்களை சேர்த்து கழகம் வலுப்பெறுவதற்கு முனைப்புடன் செயல்படவும் முடிவு செய்யப்பட்டது.

கோவை மாநகராட்சியில் மக்களை பாதிக்கின்ற வகையில் அறிவித்திருக்கின்ற புதிய வரி விதிப்பு , குப்பைகளுக்கு வரி , குடிநீர் இணைப்புக்கு வைப்புத் தொகை உள்ளிட்ட பல்வேறு மாநகராட்சி நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து நடைபெற்ற ஆர்பாட்டத்தில் அனைத்துக் கட்சிகள் சார்பில் நடைபெற்ற முற்றுகைப் போராட்டங்கள், அனைத்திலும் சிறப்பாக பங்கேற்ற மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதிக் கழக செயலாளர்கள், வட்டக் கழக செயலாளர் அனைவருக்கும் திமுக சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.



இக்கூட்டத்தில் மாவட்ட கழக நிர்வாகிகள் சிங்கை ஆர்.ரவிச்சந்திரன், சாந்தி , தலைமை செயற்குழு உறுப்பினர் டி.பி. சுப்ரமணியம் , பொதுக்குழு உறுப்பினர் ஜஹாங்கீர், கதிர்வேல்சாமி, உமா மகேஸ்வரி, பகுதிக் கழக செயலாளர்கள் கே.எம். சுந்தரம், சா.மாணிக்கம், எஸ்.எம்.சாமி, மாவட்ட அமைப்பாளர்கள் இளஞ்சேரன், தளபதி இளங்கோ, பையாக்கவுண்டர், முருகேசன், மாலதி நாகராஜன், மற்றும் வட்டக் கழகச் செயலாளர்கள், பகுதிக் கழக நிர்வாகிகள் மற்றும் கழக முன்னணியினர் கலந்து கொண்டனர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...