கோவை ஜவகர் சிறுவர் மன்ற பள்ளியில் சிறார்களுக்கு கட்டணமில்லா கலைப் பயிற்சிகள்- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தமிழக அரசின் சார்பில் பள்ளி சிறார்களுக்கு கட்டமில்லா கலைப் பயிற்சிகள் மற்றும் விஜயதசமி அன்று சிறப்பு சேர்க்கைகள் நடைபெறும் என கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு கலை பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கும் கோவை மாவட்ட ஜவகர் சிறுவர் மன்ற மாணவர் சேர்க்கை தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கலை பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கும் ஜவகர் சிறுவர் மன்றங்கள் மூலம் பள்ளி செல்லும் மாணவ, மாணவியர் கலைகளை பயிலும் வண்ணம் கட்டணமில்லா பகுதி நேர கலைப் பயிற்சியினை அளித்து வருகிறது. கோவை ஜவகர் சிறுவர் மன்றம், மலுமிச்சம்பட்டியில் இசைக் கல்லூரி வளாகத்தில் இயங்கி வருகிறது.

இம்மன்றத்தில் குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், கீபோடு ஆகிய கலைகளில் சனிக்கிழமை மதியம் 3.30 முதல் 5.30 வரையிலும், ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும் பயிற்சி அளிக்கப்படுகிறது. 5 வயது முதல் 16 வயது வரை உள்ள சிறுவர், சிறுமியர் இயப்பயிற்சியில் சேரலாம். இப்பயிற்சிக்கு கட்டணம் இல்லை. சிறுவர் மன்ற உறுப்பினராக பதிவு செய்வதற்கு ஆண்டு சந்தாவாக ரூ.300 மட்டும் செலுத்தப்பட வேண்டும்.

இம்மன்றத்தில் உறுப்பினராகி பயிற்சி பெரும் சிறார்கள் மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கவும், கருத்தரங்கம், செயல்முறை பயிலரங்கம் ஆகியவைகளில் கலந்துகொள்ளவும் வாய்ப்பளிக்கப்படும்.

தொடர்ந்து, செப்டம்பர் 30ம் தேதியன்று விஜயதசமியை முன்னிட்டு சிறப்பு சேர்க்கை காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மேலும் விபரங்களுக்கு ஜவகர் சிறுவர் மன்றத்தின் திட்ட அலுவலரை 97515 28188 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...