கோவையில் நாளை போக்குவரத்து மாற்றம்

கோவை ராஜ வீதியில் உள்ள ஸ்ரீராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் பராக்கத்தி ஊர்வலம் நாளை அதிகாலை முதல் நடைபெற உள்ளதால் நகரில் போக்குவரத்து மாற்றத்தை போலீசார் அறிவித்துள்ளனர். 

இது தொடர்பாக போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-​

முதலாவது ஊர்வலம் காலை 5.30 மணிக்கு ராமச்சந்திரா ரோட்டில் புறப்படும் போது சுக்கவார்பேட்டையில் இருந்து பூமார்க்கெட் நோக்கி வரக்கூடிய அனைத்து வாகனங்களும் காந்திபார்க் டி.பி. சாலை வழியாக மேட்டுப்பாளையம் சாலை சென்று செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

ஊர்வலம் சுக்கவார்பேட்டை அடையும் போது பழைய மேம்பாலத்தில் இருந்து சுக்கவார்பேட்டை நோக்கி வரக்கூடிய அனைத்து வாகனங்களும் மரக்கடை சந்திப்பில் இருந்து இடதுபுறம் திரும்பி டவுன்ஹால் வைசியாள் வீதி வழியாக காந்திபார்க் சென்று செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

பேரூர் செல்வபுரத்தில் இருந்து செட்டி வீதி, ராஜவீதி வரக்கூடிய அனைத்து வாகனங்களும் சிவாலயா சந்திப்பு மற்றும் செல்வபுரம் உயர்நிலைப் பள்ளி சாலையில் வலதுபுறம் திரும்பி உக்கடம் பைபாஸ் வழியாக உக்கடம் வந்து பைபாஸ் சுங்கம் வந்து வெஸ்ட் கிளப் சாலை வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம். 

உக்கடத்தில் இருந்து ஒப்பணக்கார வீதி நோக்கி வரக்கூடிய அனைத்து வாகனங்களும் சுங்கம் பைபாஸ் வழியாக கிளாசிக் டவர் வந்து ரயில்வே நிலையம் வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

2-வது ஊர்வலம் மேட்டுப்பாளையம் சாலை அழகேசன் சாலையை அடையும் போது என்.எஸ்.ஆர் சாலை மற்றும் ஏ.ஆர்.சி. சந்திப்பில் இருந்து வடகோவை நோக்கி வரக்கூடிய அனைத்து வாகனங்களும் ஏ.ஆர்.சி. சந்திப்பிலிருந்து சிவனாந்த காலனி சென்று செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

பூமார்க்கெட்டில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் அவினாசிலிங்கம் கல்லூரி சாலையில் இடதுபுறம் திரும்பி பாரதிபார்க் சாலை 4.என்.எஸ்.ஆர் சாலை வழியாக மேட்டுப்பாளையம் சாலை செல்லலாம்.

ஊர்வலம் ஆர்.ஜி. வீதியை அடையும் போது சுக்கரவார்பேட்டையில் இருந்து பூமார்க்கெட் நோக்கி செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும சுக்கரவார்பேட்டை சந்திப்பில் இருந்து காந்திபார்க் டி.பி..சாலை கௌலிபிரவுன் சாலை வழியாக மேட்டுப்பாளையம் சாலை சென்று செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம். 

ஊர்வலம் விசிவி சாலையில் வரும் போது புருக்பாண்டு சாலையில் இருந்து தேவங்கபேட்டை சாலை வழியாக வரும் அனைத்து வாகனங்களும் வலதுபுறம் திரும்பாமல் நேராக புருக்பாண்டு சாலையில் சென்று பழைய மேம்பாலம் வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

 

மேற்படி, போக்குவரத்து மாற்றத்திற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தருமாறு கோவை மாநகர காவல் ஆணையர் கேட்டுக் கொண்டார். 

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...