கடையில் டீ குடித்துக்கொண்டிருந்த திருமுருகன் காந்தி மீண்டும் கைது!

ஜெனிவாவில் நடந்து வரும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசி வரும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை சிங்களர்கள் தாக்க முயன்ற சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. சிங்களர்களின் செயலைக் கண்டித்தும், இலங்கை அரசை இந்திய அரசு கண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தியும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டு மதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், வைகோ மீது சிங்களர்கள் தாக்கப்பட்டத்தைக் கண்டித்து நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை தமிழ்புலிகள் அமைப்பினர் இன்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்புலிகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நாகை திருவள்ளுவன் தலைமையில் நடந்த முற்றுகைப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, பிரவீன்குமார், அந்த அமைப்பைச் சேர்ந்த சிவகுமார் ஆகியோர் சென்றனர். 

அப்போது, நுங்கம்பாக்கம் காவல்துறை துணை ஆணையர், அவர்களைத் தடுத்துநிறுத்தியுள்ளார். அப்போது, தடையை மீறி போராட்டத்துக்கு அவர்கள் ஆதரவு தெரிவித்தனர். பின்னர் அங்கிருந்து மருத்துவமனைக்குப் புறப்பட்ட திருமுருகன் உட்பட 3 பேரும் போகும் வழியில் சென்னை லயோலா கல்லூரி அருகில் உள்ள கடையில் டீக் குடித்துக்கொண்டிருந்தனர். 

அப்போது, நுங்கம்பாக்கம் காவல்துறை துணை ஆணையர் தலைமையில் பத்து காவலர்கள் அந்த இடத்துக்கு திடீரென சென்று,  டீக் குடித்துக்கொண்டிருந்த திருமுருகன் காந்தி உட்பட 3 பேரையும் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...