எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசை உடனடியாக பதவி விலக கோரி, மாநிலம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தும் - மாநில செயலாளர் முத்தரசன்


எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசை உடனடியாக பதவி விலக கோரி, வருகின்ற அக்டோபர் மூன்றாம் தேதி மாநிலம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமான ஜீவா இல்லத்தில், செய்தியாளர்களிடம் பேசியவர் இதனை தெரிவித்தார். மக்கள் மற்றும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுகளை இழந்து மைனாரிட்டி அரசாக ஆட்சி நீடித்து வருவதாக குற்றம்சாட்டினார். நீண்ட போராட்டத்திற்கு பிறகு தமிழகத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மத்தியில் ஆளும் கட்சியின் பிரதிநிதியாக செயல்படக்கூடாது எனவும், புதிய ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு செயல்டுவதுடன் தமிழகத்தில் உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டுமென முத்தரசன் தெரிவித்தார்.



எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கோடிக்கணக்கான ரூபாய் அரசு பணம் செலவழிக்கப்பட்டு அரசியல் பேசுவது ஜனநாயகத்திற்கு புறம்பானது எனவும், நடிகர் சிவாஜிகணேசன் மணிமண்டபம் திறக்க முதலமைச்சர் செல்வதை யாரோ தடுப்பதால் அந்நிகழ்ச்சிக்கு அவர் செல்லவில்லை எனவும் தெரிவித்தார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையம் ஒரு நாடகம் எனவும், கண் துடைப்புக்காக நடத்தப்படும் இந்த விசாரணையால் எந்த பலனும் இல்லை என கூறிய அவர், அவரது மரணம் தொடர்பாக உண்மை வெளிவர வேண்டுமெனில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் பதவி விலகி விசாரணையை எதிர்கொள்ள வேண்டுமென தெரிவித்தார்.

மேலும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக மத்திய அமைச்சர்கள், தமிழக அமைச்சர்கள், தமிழக பொறுப்பு ஆளுநர், லண்டன் மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்கள் உள்ளிட்டோரை விசாரிக்க வேண்டுமென கூறியவர், ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை அல்லது பணியில் உள்ள உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டுமென வலியுறுத்தினார்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...