காந்தியின் 148-வது பிறந்தநாளை முன்னிட்டு கதர் அங்காடியில் சிறப்பு விற்பனை துவக்கம்

காந்தியின் 148-வது பிறந்தநாளினை முன்னிட்டு கோவையில் கதர் அங்காடியில் சிறப்பு விற்பனையினை கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் இன்று துவக்கி வைத்தார்.



மத்திய அரசின் கிராம வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் கதர் விற்பனை நிலைய அங்காடியில் விழாக்காலங்களை முன்னிட்டு சிறப்பு விற்பனைகள் துவங்கப்படுவது வழக்கம். அதன்படி, இன்று காந்தி ஜெயந்தியினை முன்னிட்டு கோவையில் செயல்பட்டு வரும் கதர் பவனில் மாவட்ட ஆட்சியர் சிறப்பு விற்பனையினை துவக்கி வைத்தார்.

இதனைத்தொடர்ந்து ஆட்சியர் பேசுகையில், தீபாவளி தினத்தினை முன்னிட்டு கதர் ஆடைகளுக்கு 30 சதவிகிதம், பட்டு ரகங்களுக்கு 30 சதவிகிதம், பாலியீஸ்டர் துணிகளுக்கு 30 சதவிகிதம், உள்ளன் ரக ஆடைகளுக்கு 20 சதவிகிதம் என சிறப்பு தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.



அவிநானி சாலையில் செயல்பட்டு வரும் பிரதான கதர் அங்காடி, ஆர்.எஸ்.புரம், பெரியநாயக்கன்பாளையம், பொள்ளாச்சி, உதகை, கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் கதர் அங்காடியில் இந்த தள்ளுபடிகள் உள்ளன.

கடந்த ஆண்டு தீபாவளி சிறப்பு விற்பனையில் 1.69 கோடி ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த ஆண்டு 1.52 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயம் செய்யப்படுகிறது. 

பொதுமக்கள் கதர் அங்காடியின் சிறப்பு விற்பனைக்கு தங்களது ஆதரவினைத் தர வேண்டும்.

இவ்வாறு கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார்.

இதனிடையே, கடந்த ஆண்டு 1.69 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது நடப்பு ஆண்டிற்கு 1.52 கோடி ரூபாய் என குறைக்கப்பட்டுள்ளது கதர் ஆடைகளின் பயன்பாடு குறைந்து வருவதை உணர்த்துகிறது. குறிப்பாக, இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நாகரீக உடைகளின் பயன்பாட்டினாலேயே கதர் பயன்பாடு குறைந்துள்ளது.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...