மதபோதையில் உ.பி. அரசு- சுற்றுலா தல பட்டியலில் இருந்து தாஜ்மஹால் நீக்கம்


மத்தியில் ஆட்சிசெய்து வரும் பாஜக-வின் ஆதரவுடன் உத்தர பிரதேசத்தில் வெற்றிபெற்ற யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு தொடர்ந்து மக்கள் மத்தியில் மதபோதனைகளை தினித்து வருகிறது.

இந்து மத கோட்பாடுகளின் படி செயல்பட்டு வரும் உ.பி. அரசு தொடர்ந்து பிற மதத்தினரை ஒடுக்கும் வகையிலும், மீறும் பட்சத்தில் கலவரங்களை தூண்டும் வகையிலும் கடந்த சில மாதங்களாக தீவிர முறையில் செயலாற்றி வருவதாக மக்களால் குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில் தற்போது, உத்தரப்பிரதேச அரசு வெளியிட்டுள்ள சுற்றுலா தல பட்டியலில் தாஜ்மஹால் நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு உத்தரப்பிரதேசத்தின் சுற்றுலாத் தலங்களுக்கான புதிய பட்டியலை இன்று வெளியிட்டது. அதில் உலகப் புகழ்வாய்ந்த, அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் இடம்பெறவில்லை.



அதேநேரத்தில், காசி நகருக்கு அந்த பட்டியலில் முதல் இடமும், அயோத்தி ராம ஜென்ம பூமிக்கு இரண்டாவது இடமும், கிருஷ்ணர் பிறந்த இடமான மதுராவுக்கு மூன்றவது இடமும் வழங்கப்பட்டுள்ளது பன்முகம்கொண்ட இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட மதத்தினை மட்டுமே பரப்பும் வகையில் அமைந்துள்ளது.

மொகலாய மன்னர் ஷாஜகான் அவரது மனைவி மும்தாஜின் நினைவாகவும் தங்களின் காதலின் சின்னமாகவும் தாஜ்மஹாலை கட்டினார். புகழ்ப்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றான தாஜ்மஹாலுக்கு ஆண்டுதோறும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், உ.பி அரசின் சுற்றுலாத் தலங்கள் பட்டியலில் தாஜ்மஹால் நீக்கப்பட்டிருப்பது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...