கோவை அரசு மருத்துவமனையில் முறையாக சிகிச்சை வழங்கப்படவில்லை- விவசாயி வேதனை

சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் கடந்த சில நாட்களாக குடல் இறக்கம் நோயால் அவதியுற்று வருகிறார். 

இதனைத்தொடர்ந்து, சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு வந்த கோவிந்தராஜ், தனக்கு அரசு மருத்துவமனை ஊழியர்கள் முறையான சிகிச்சை அளிக்காமல் அலைக்கழிப்பதாக புகார் தெரிவித்துள்ளார். 

இது குறித்து செய்தியாளகளிடம் அவர் கூறியதாவது:- 

எனது சொந்த ஊர் சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் கிராமம். அங்கு இருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு வந்து சேர சுமார் 8 மணி நேரம் ஆகிறது. 

குடல் இறக்கம் நோயால் பாதிக்கப்பட்ட எனக்கு இரத்தம் மற்றும் சிறுநீரக பரிசோதனை செய்ய வேண்டும் என அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அதன் பேரில், மருத்துவமனை வளாகத்தில் இருக்கும் ஆய்வகத்திற்கு சென்றேன். கடந்த இரு தினங்களாக தினமும் ஆய்வகத்திற்கு செல்கிறேன். நான் செல்லும் நேரத்தில் ஆய்வகத்தில் ஆட்கள் இல்லை எனவும், நாளை வர வேண்டும் என்றும் கூறுகின்றனர்.



விவசாய கூலியான என்னை தினமும் அலைக்கழிப்பதால் அன்றாட வாழ்வாதாரத்தை பறிகொடுப்பதோடு, உடல் நிலையும் மிகவும் மோசமாகி வருகிறது.

மருத்துவ அதிகாரிகள் இந்த பிரச்சனையில் தலையிட்டு எனக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...