நீலகிரியில் தீபாவளி கதர் ஆடைகளின் தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

நாட்டின் விடுதலைக்காகவும் தன்னிகரற்ற முன்னேற்றத்திற்காகவும் தனது வாழ்க்கையினை முழுமையாக அர்ப்பணித்த மகாத்மாவின் நினைவுகளை போற்றும் வகையில் ஒவ்வொரும் ஆண்டும் அக்டோபர் 2-ம் தேதி அண்ணல் காந்தியடிகளின் பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. 

கதர் ஆடைகளை இந்தியா முழுவதும் பரவச் செய்த பெருமையை பெற்ற அவரது பிறந்த நாளில், கதர் மற்றும் கிராமத் தொழில்களின் மூலமாக  பலகோடி மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. அந்த வகையில் உதகை மாவட்டத்திற்கு 2017-18-ம் ஆண்டிற்கு ரூ.62 இலட்சம் கதர் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல, இந்த ஆண்டு காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடியினை அரசு அறிவித்துள்ளது. 

  • கதர் - 30 சதவீதம்
  • பட்டு - 30 சதவீதம்
  • பாலியஸ்டர் - 30 சதவீதம்
  • உல்லன் - 30 சதவீதம்


இதனிடையே, உதகை சேரிங்கிராஸில் அண்ணல் காந்தியடிகள் பிறந்த தினத்தை முன்னிட்டு நேற்று (02.10.2017) அவரது திருவுருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை காதி அங்காடியில் தீபாவளி கதர் சிறப்பு தள்ளுபடியின் முதல் விற்பனையையும் அவர் தொடங்கி வைத்தார்.



இந்த நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் அர்ஜினன், உதகை சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...