நீலகிரியில் தீபாவளி கதர் ஆடைகளின் தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

நாட்டின் விடுதலைக்காகவும் தன்னிகரற்ற முன்னேற்றத்திற்காகவும் தனது வாழ்க்கையினை முழுமையாக அர்ப்பணித்த மகாத்மாவின் நினைவுகளை போற்றும் வகையில் ஒவ்வொரும் ஆண்டும் அக்டோபர் 2-ம் தேதி அண்ணல் காந்தியடிகளின் பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. 

கதர் ஆடைகளை இந்தியா முழுவதும் பரவச் செய்த பெருமையை பெற்ற அவரது பிறந்த நாளில், கதர் மற்றும் கிராமத் தொழில்களின் மூலமாக  பலகோடி மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. அந்த வகையில் உதகை மாவட்டத்திற்கு 2017-18-ம் ஆண்டிற்கு ரூ.62 இலட்சம் கதர் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல, இந்த ஆண்டு காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடியினை அரசு அறிவித்துள்ளது. 

  • கதர் - 30 சதவீதம்
  • பட்டு - 30 சதவீதம்
  • பாலியஸ்டர் - 30 சதவீதம்
  • உல்லன் - 30 சதவீதம்


இதனிடையே, உதகை சேரிங்கிராஸில் அண்ணல் காந்தியடிகள் பிறந்த தினத்தை முன்னிட்டு நேற்று (02.10.2017) அவரது திருவுருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை காதி அங்காடியில் தீபாவளி கதர் சிறப்பு தள்ளுபடியின் முதல் விற்பனையையும் அவர் தொடங்கி வைத்தார்.



இந்த நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் அர்ஜினன், உதகை சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...