மக்கள் நலன்காக்கத் தவறிய தமிழக அரசை பதவி விலகக் கோரி கோவையில் சிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்


தமிழக நலன்களை பாதுகாக்கத் தவறிய எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசை உடனடியாக பதவி விலக வலியுறுத்தி கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மாநில உரிமைகளை பறிக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த தவறியதோடு அதனை மீட்க தவறிய தமிழக அரசு பதவி விலகக் கோரி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு அறிவித்திருந்தது.

அதன்படி, இன்று கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு மாநில அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் மாநில பொருளாளர் ஆறுமுகம், மக்கள் மட்டும்மல்லாமல் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவையும் இழந்து விட்ட தமிழக அரசு உடனடியாக பதவி விலக வேண்டும். வரிவசூல் என்ற பெயரால் மக்கள் விரோத நடவடிக்கைகளை எடுத்து வரும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் என்றார்.

இதையடுத்து, ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

முன்னதாக, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மூதாட்டி ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, அவரை உடனிருந்தவர்களும், காவல்துறையினரும் இணைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...