கோவை கோட்ட போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இன்று இரவுக்குள் முழு ஊதிய வழங்காவிட்டால் நாளை பேருந்துகளை இயக்க போவதில்லை என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

கோவை கோட்டத்திற்குட்பட்ட கோவை,ஈரோடு,திருப்பூர், நீலகிரி ஆகிய 4 மாவட்ட அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர்,நடத்துனர் , மற்று பணியாளர்களுக்கு செப்டம்பர் மாதத்திற்கான ஊதியம் வெறும் 50 சதவீதம் மட்டுமே இன்று வழங்கப்பட்டுள்ளது.கடந்த சில மாதங்களாக போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதியத்தை அரசு தவணை முறையில் வழங்கி வந்ததாகவும், இதனால் பல்வேறு சிரமங்களை சந்திக்க நேரிடுவதாக தெரிவித்த தொழிலாளர்கள், இதனை கண்டித்து  நாளை பேருந்துகளை இயக்க போவதில்லை என அனைத்து தொழிற்சங்கம் சார்பாக அறிவிக்கபட்டுள்ளது. 

இதுகுறித்து சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தினர் கூறுகையில், கோவை கோட்டத்தில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு மட்டுமே முழு ஊதிய வழங்கபடுவதாகவும் மற்ற தொழிலாளர்களுக்கு தவனை முறையிலே ஊதிய கிடைக்கப்பெறுவதாக தெரிவித்தவர்கள், இன்று இரவுக்குள் முழு ஊதியம் கிடைக்க பெறாவிட்டால் நாளை கோவை கோட்டத்தை சேர்ந்த  18 ஆயிரம் பணியாளர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக தெரிவித்தனர்.

Newsletter

Flower Show to Commence at CODISSIA from September 10

A grand flower exhibition featuring colourful floral displays, decorative installations, entertainment rides, a gaming z...

கோவை கொடிசியாவில் பிரம்மாண்ட மலர் கண்காட்சி செப்டம்பர் 10 முதல் தொடக்கம்

கோவை கொடிசியா வளாகத்தில் செப்டம்பர் 10 முதல் பிரம்மாண்ட மலர் கண்காட்சி நடைபெறுகிறது. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை வண்...

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...