கோவை கோட்ட போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இன்று இரவுக்குள் முழு ஊதிய வழங்காவிட்டால் நாளை பேருந்துகளை இயக்க போவதில்லை என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

கோவை கோட்டத்திற்குட்பட்ட கோவை,ஈரோடு,திருப்பூர், நீலகிரி ஆகிய 4 மாவட்ட அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர்,நடத்துனர் , மற்று பணியாளர்களுக்கு செப்டம்பர் மாதத்திற்கான ஊதியம் வெறும் 50 சதவீதம் மட்டுமே இன்று வழங்கப்பட்டுள்ளது.கடந்த சில மாதங்களாக போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதியத்தை அரசு தவணை முறையில் வழங்கி வந்ததாகவும், இதனால் பல்வேறு சிரமங்களை சந்திக்க நேரிடுவதாக தெரிவித்த தொழிலாளர்கள், இதனை கண்டித்து  நாளை பேருந்துகளை இயக்க போவதில்லை என அனைத்து தொழிற்சங்கம் சார்பாக அறிவிக்கபட்டுள்ளது. 

இதுகுறித்து சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தினர் கூறுகையில், கோவை கோட்டத்தில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு மட்டுமே முழு ஊதிய வழங்கபடுவதாகவும் மற்ற தொழிலாளர்களுக்கு தவனை முறையிலே ஊதிய கிடைக்கப்பெறுவதாக தெரிவித்தவர்கள், இன்று இரவுக்குள் முழு ஊதியம் கிடைக்க பெறாவிட்டால் நாளை கோவை கோட்டத்தை சேர்ந்த  18 ஆயிரம் பணியாளர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக தெரிவித்தனர்.

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...