மதுபானக் கடை வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டவர் மது போதையால் உயிரிழப்பு

கோவை மாவட்டத்தில் மதுக்கடை வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்களில் ஒருவர் மது குடித்ததால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் மதுபானக் கடைகளுக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கோவை மாவட்டம் சூலூர் அடுத்த செங்கத்துறை கிராமத்தில் மதுக்கடைக்கு ஆதரவாக மூடப்பட்ட மதுக்கடைகளை திறக்க வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த குடிமகன்கள் செவ்வாய்க்கிழமையன்று சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இந்நிலையில் மதுக்கடை வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவரான ஆறுமுகம் என்பவர் செவ்வாய்க்கிழமை இரவு அளவிற்கு அதிகமாக மது குடித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து புதன்கிழமை காலை தூக்கத்தில் இருந்து அவரை எழுப்பி உள்ளனர். அப்போது அவர் மயக்க நிலையில் இருந்ததையடுத்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சோதனை செய்த போது அவர் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. 

இது குறித்து அப்பகுதி கிராம மக்கள் கூறுகையில், மதுக்கடை வேண்டும் என ஆளும் கட்சியினர் குடிமகன்களை திரட்டி போராட்டம் மேற்கொண்டனர். அந்த போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு இலவசமாக மது வழங்கினர். அவர்கள் அளித்த இலவச மதுவால் தான் ஆறுமுகம் இறந்துவிட்டார் என்றனர்.

மதுக்கடைக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் கிராமத்தில் மது குடித்து ஒருவர் உயிரிழந்துள்ளது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...