நீலகிரியில் பொது மக்கள் தங்களது குறை தீர்க்கும் கோரிக்கைகளை தெரிவிக்க "உங்களின் சேவை" அறிமுகம்

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது மக்கள் தங்களது குறை தீர்க்கும் கோரிக்கைகளை தெரிவிக்க உங்களின் சேவை என்ற வாட்ஸ் அப், ட்விட்டர் மற்றும் முகநூல் பயன்பாட்டை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து ஆட்சியர் கூறியதாவது:-

நீலகிரி மாவட்ட பொது மக்கள் தங்களது குறைதீர்க்கும் கோரிக்கைகளை பிரதி வாரம் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் அக்டோபர் 3-ம் தேதி முதல் "உங்களின் சேவையில்" பொது மக்கள் தங்களது கோரிக்கை மனுக்கள், புகார் மனுக்கள் மற்றும் கருத்துகளை மாவட்ட ஆட்சியரின் வாட்ஸ் அப் எண்ணிற்கு தெரிவிக்கலாம்.

மேலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியரின் முகநூல் பதிவு மற்றும் ட்விட்டர் மூலமாக பொதுமக்கள் கீழ்க்கண்ட இணைய வழியை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

இணைய வழி முகவரி:

www.facebook.com/collector Nilgiris

www.twitter.com/collrnlg

மாவட்ட ஆட்சியரின் வாட்ஸ்அப் எண்: 99431 26000.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...