அக்.,6-ம் தேதி திருமணமான பெண்களுக்கான ”கர்வா சவுத் 2017” விழா


வட இந்தியாவில் திருமணமான இந்து பெண்கள் கொண்டாடும் "கர்வா சவுத்" விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் திருமணமான பெண்கள், தங்களது கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என கடவுளிடம் பிரார்த்தனை செய்வார்கள். திருமணமான பெண்கள் ஒரு மணமகள் போல ஆடை அணிந்து, வளையல் உள்ளிட்ட நகைகள் மற்றும் பொட்டு வைத்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள். 

இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான "கர்வா சவுத்" விழா நாளை (அக்.,6) பாப்பிஸ் ஹோட்டலில் (Poppy's hotel) மாலை நடக்கிறது. இந்த நிகழ்ச்சியினை அமிகோஸ் செயிம்பிரி நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. 

"கர்வா சவுத்" விழா குறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சந்தீப் பேசுகையில்,  இந்த பெண்களுக்கான அழகுப் போட்டியல்ல. ஒவ்வொரு திருமணமான பெண்ணும் அவர்களது திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கான மேடையாக இது உள்ளது. போட்டி பங்கேற்பாளர்கள் மேடையில் அணிவகுத்து வரும் போது,  அவர்களது உடல் வடிவமைப்பு, வயதுகளை பொருட்படுத்தாமல் அவர்களது ஆர்வம், நம்பிக்கை மற்றும் வெளிப்பாடு போன்றவை அடிப்படையாக கொண்டே வெற்றியாளர் தேர்வு செய்யப்படுவார். இவ்வாறு அவர் கூறினார்.

"கர்வா சவுத்" விழாவில் திருமணமான பெண்களுக்கான ஆடை அலங்கார அணிவகுப்பு நடைபெறுகிறது.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...