கோவையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது - மாவட்ட ஆட்சியர்

கோவை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் டெங்கு தடுப்பு தின நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் இன்று துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஏராளமான துப்புரவு பணியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பங்கேற்று டெங்கு தடுப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் ஹரிஹரன் கூறியதாவது:-

டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. படிப்படியாக டெங்கு பாதிப்புகள் குறைந்து வருகிறது. சுகாதாரத் துறை அதிகாரிகள் தேவையற்ற விடுமுறைகள் எடுப்பதை தவிர்க்க உத்தரவிட்டுள்ளது.

மேலும், தனியார் மருத்துவமனைகளில் டெங்கு அறிகுறிகளுடன் வருபவர்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. டெங்கு ஒழிப்பு பணிகளில் அதிகளவில் சுகாதார பணியாளர்களை ஈடுபடுத்தி உள்ளோம் என்றார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ், உதவி ஆட்சியர் சரண்யாஹரி, துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் பானுமதி, மாநகராட்சி மருத்துவ அலுவலர் சந்தோஷ்குமார், மாநகராட்சி உதவி ஆணையர் அண்ணாதுரை, உதவி இயக்குநர்கள் பத்மாவதி, கணேஷ்ராம் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...