தபால்நிலையத்திற்கு சொந்தமான காலியிடங்களில் மரக்கன்றுகள் நடும் பணி தீவிரம்

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் இந்தியா தபால் நிலையத்திற்கு சொந்தமான 42 சென்ட் காலியிடம் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக புதர்கள் மண்டியும், குப்பைகுளமாகவும் அந்த இடம் காட்சியளித்து வந்தது. 

இந்த நிலையில், பசுமை இந்தியாவாக மாற்றும் முயற்சியில் தபால்துறையும், கோவை லயன்ஸ் கிளப்பும் இணைந்து, தபால் நிலையத்திற்கு சொந்தமான காலியிடத்தில் இருந்த குப்பைகள் மற்றும் புதர்கள் அகற்றப்பட்டு, தூய்மைப்படுத்தப்பட்டது. 

இதைத் தொடர்ந்து, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், சுத்தம் செய்யப்பட்ட இடங்களில் 300 மரக்கன்றுகளை நடும்பணி தொடங்கியது. கோவை தெற்குபிரிவு தபால்நிலைய ஆய்வாளர் ஏ.என். சாந்தினி பேகம் தலைமையில் அதிகாரிகள் சாரதா சம்பத், சித்ராதேவி உள்பட பலர் மரக்கன்றுகளை நடும் பணியில் ஈடுபட்டனர். 

இது தொடர்பாக கோவை தெற்குபிரிவு தபால்நிலைய ஆய்வாளர் ஏ.என். சாந்தினி பேகம் பேசுகையில், தபால்நிலையத்திற்கு சொந்தமான காலியிடங்களில் மரக்கன்றுகள் நடுவதன் மூலமாக சுற்றுப்புறச்சூழல் பாதுகாக்கப்படுகிறது. பொதுமக்களும் அவர்களால் முடிந்த மரக்கன்றுகளை நடவேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

கடந்த சில நாட்களுக்கு முன்பு சிட்கோ பகுதியில் தபால்நிலையத்திற்கு சொந்தமான உள்ள 25 சென்ட் காலியிடத்தில் சுத்தம் செய்யப்பட்டு, 110 மரக்கன்றுகள் நடப்பபட்டது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

Flower Show to Commence at CODISSIA from September 10

A grand flower exhibition featuring colourful floral displays, decorative installations, entertainment rides, a gaming z...

கோவை கொடிசியாவில் பிரம்மாண்ட மலர் கண்காட்சி செப்டம்பர் 10 முதல் தொடக்கம்

கோவை கொடிசியா வளாகத்தில் செப்டம்பர் 10 முதல் பிரம்மாண்ட மலர் கண்காட்சி நடைபெறுகிறது. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை வண்...

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...