தபால்நிலையத்திற்கு சொந்தமான காலியிடங்களில் மரக்கன்றுகள் நடும் பணி தீவிரம்

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் இந்தியா தபால் நிலையத்திற்கு சொந்தமான 42 சென்ட் காலியிடம் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக புதர்கள் மண்டியும், குப்பைகுளமாகவும் அந்த இடம் காட்சியளித்து வந்தது. 

இந்த நிலையில், பசுமை இந்தியாவாக மாற்றும் முயற்சியில் தபால்துறையும், கோவை லயன்ஸ் கிளப்பும் இணைந்து, தபால் நிலையத்திற்கு சொந்தமான காலியிடத்தில் இருந்த குப்பைகள் மற்றும் புதர்கள் அகற்றப்பட்டு, தூய்மைப்படுத்தப்பட்டது. 

இதைத் தொடர்ந்து, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், சுத்தம் செய்யப்பட்ட இடங்களில் 300 மரக்கன்றுகளை நடும்பணி தொடங்கியது. கோவை தெற்குபிரிவு தபால்நிலைய ஆய்வாளர் ஏ.என். சாந்தினி பேகம் தலைமையில் அதிகாரிகள் சாரதா சம்பத், சித்ராதேவி உள்பட பலர் மரக்கன்றுகளை நடும் பணியில் ஈடுபட்டனர். 

இது தொடர்பாக கோவை தெற்குபிரிவு தபால்நிலைய ஆய்வாளர் ஏ.என். சாந்தினி பேகம் பேசுகையில், தபால்நிலையத்திற்கு சொந்தமான காலியிடங்களில் மரக்கன்றுகள் நடுவதன் மூலமாக சுற்றுப்புறச்சூழல் பாதுகாக்கப்படுகிறது. பொதுமக்களும் அவர்களால் முடிந்த மரக்கன்றுகளை நடவேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

கடந்த சில நாட்களுக்கு முன்பு சிட்கோ பகுதியில் தபால்நிலையத்திற்கு சொந்தமான உள்ள 25 சென்ட் காலியிடத்தில் சுத்தம் செய்யப்பட்டு, 110 மரக்கன்றுகள் நடப்பபட்டது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...