வட்டாட்சியர் அலுவலகத்தில் தற்காலிக கணினி பதிவேற்றுநர் வேலைவாய்ப்பு

கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் வட்டாட்சியர் அலுவலகத்தில் நில அளவை ஆவணங்களை கணினி மயமாக்கும் திட்டத்தின்கீழ் ஓராண்டிற்கு ஒப்பந்த அடிப்படையில் தகுதியான நபர் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

இந்த தற்காலிக கணினி பதிவேற்றுநர் பணியிடத்திற்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலம் தேர்வு செய்யப்படும் நபருக்கு மாதம் 7500 என்ற அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும். 

மேலும், வேலைவாய்ப்பகம் பரிந்துரை செய்யும் நபர்களைத்தவிர கோவை மாவட்டத்தில் வசிக்கும் இதர தகுதியுள்ள நபர்கள் வயது சான்று, கல்விச் சான்று ஆகியவற்றுடன் உதவி இயக்குநர், மாவட்ட நில அளவை அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கோவை - 18 என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாக வரும் அக்டோபர் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

குறைந்தபட்ச கல்வித் தகுதி 10ஆம் வகுப்பு தேர்ச்சி, தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சில் தேர்ச்சியுடன் கணினி இயக்குவதற்குரிய அடிப்படை அறிவு பெற்ற பெண் பாலினத்தவர் மட்டுமே தகுதியுடையோர். 1.7.2017 அன்று 32 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். 

கடைசி நாளுக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...