சசிகலாவுக்கு 5 நாள் பரோல் வழங்கியது கர்நாடக சிறைத்துறை



சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு சிறை தண்டனை பெற்ற சசிகலா, அவரது உறவினர்கள், இளவரசி, சுதாகரன் ஆகியோர், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். சசிகலாவின் கணவர், நடராஜன், உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு, இரு தினங்களுக்கு முன், உடல் உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. அவரை பார்க்க பரோல் கேட்டு சிறை அதிகாரிகளிடம், சசிகலா விண்ணப்பித்தார். 

முதலில், முறையான ஆவணங்கள் இல்லை என அவரது மனு நிராகரிக்கப்பட்டது. பின்னர், 2-வது முறையாக, உரிய ஆவணங்களுடன் சசிகலா பரோல் கோரி மனு தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து, கர்நாடக சிறை துறையினர், தமிழக காவல் துறையினரிடம், பரோல் வழங்குவதில் ஆட்சேபனை உள்ளதா என கேட்டனர். தமிழக காவல் துறை சார்பில், ஆட்சேபனையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், சசிகலா பரோல் குறித்து உயர் அதிகாரிகளுடன் சிறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

இதனை தொடர்ந்து சசிகலாவுக்கு 5 நாட்கள் பரோல் சிறை நிர்வாகம் வழங்கியது. சிறை நடைமுறைகளை முடித்து விட்டு வெளியே வரும் அவர் பெங்களூரூவில் இருந்து விமானம் மூலம் மாலை 5 மணியளவில் சென்னை வருகிறார். அவரை அழைத்து வருவதற்காக, தினகரன் தனது ஆதரவாளர்களுடன் நேற்று மாலை, பெங்களூரு புறப்பட்டு சென்றார். சென்னை வரும் சசிகலா, தி.நகரில் உள்ள இளவரசி மகள் கிருஷ்ணப்ரியா வீட்டில் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...