கோவை மாநகராட்சியின் புதிய வரி விதிப்பை ரத்து செய்யக் கோரி மாநகராட்சி ஆணையரிடம் திமுக-வினர் மனு

புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள கூடுதல் குடிநீர் வைப்புத் தொகை மற்றும் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ள குடிநீர் வரிவிதிப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி குறிச்சி பிரபாகரன் தலைமையில் குறிச்சி பகுதி திமுக-வினர் இன்று கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும தனி அலுவலரிடம் மனு அளித்தனர்.



இதுகுறித்து குறிச்சி பிரபாகரன் கூறியதாவது:-

உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் உத்தரவின் பேரில் கோவை மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து பல்வேறு மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதைக் கண்டித்து அனைத்துக் கட்சி சார்பில் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடந்துவருகிறது.

கோவை மாநகரத்தில் தரமான தார் சாலைகளும், வடிகாள்களும் அமைக்கப்படாத நிலையில் வரியினை மட்டும் உயர்த்தி பொதுமக்களை வாட்டும் வகையில் மாநகராட்சி செயல்பட்டு வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் எஸ்.பி.வேலுமணியின் பினாமி ஆட்களால் மேற்கொள்ளப்படுவதால் மாவட்ட நிர்வாகமும் இதன் மீது கவணம் செலுத்துவதில்லை.

குறிப்பாக, மாநகராட்சி ஊழியர்களுக்கே ஊதியம் வழங்கமுடியாத நிலையில் நிதி நிலைமை மோசமாக உள்ளது.

இத்தகைய சூழ்நிலையில், தமிழக அரசும், கோவை மாநகராட்சி நிர்வாகமும் மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டால், நகரமே ஸ்தம்பிக்கும் அளவிற்கு பெரும் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு குறிச்சி பிரபாகரன் தெரிவித்தார்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...