உடலை பலப்படுத்துவதற்காக, உயிரைப் பாதுகாக்க தவறும் நடைபயிற்சி செய்யும் மக்கள்

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள மலைமாவட்டமான நீலகிரிக்கு மேட்டுப்பாளையத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை போடப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து, கோத்தகிரி மற்றும் பர்லியாறு வழியாக என இரு சாலைகளில் உதகை செல்ல முடியும். இந்த இரு சாலைகளிலும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.

மலைப்பகுதி என்பதால் வனவிலங்குகளின் நடமாட்டமும் மிகுந்து காணப்படும். குறிப்பாக மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையில் அடிக்கடி யானை, புலி, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் சாலையில் உலா வருகின்றன. இதனால், அந்தப் பகுதியில் இருக்கும் குடியிருப்புவாசிகள் அச்சத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர். 

இந்த நிலையில், மிருகங்கள் நடமாடும் மேட்டுப்பாளையம் - கோத்தகிரி வனப்பகுதிகளில் உயிரைப் பொருட்படுத்தாமல் அப்பகுதி மக்கள் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். இதனால், மக்களை வனவிலங்குகள் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, கடந்த ஆண்டு மேட்டுப்பாளையம் வனத்துறையினரின் சோதனை சாவடியில் இருந்து 5 கி.மீ தொலைவிற்கு பொதுமக்கள் நடந்து செல்ல மேட்டுப்பாளையம் செசன்ஸ் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

ஆனால், நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காமல், தடை செய்யப்பட்ட பகுதிகளில் நடைபயிற்சி செய்வது ஆபத்தானது என்பதை மக்கள் உணர்வதில்லை. அவ்வாறு தடையை மீறுபவர்களை கண்டிக்கவோ, எச்சரிக்கை விடுக்கவோ வனத்துறை அதிகாரிகள் சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதுவரை, வனவிலங்குகளை தொந்தரவு செய்யும் வகையில் வனப்பகுதிக்குள் செல்லும் மக்களோ அல்லது விலங்குகளுக்கோ எந்த உயிர்சேதம் ஏற்படவில்லை. ஆனால், இதே நிலை தொடரும் பட்சத்தில் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. 

உயிரை பாதுகாத்துக் கொள்ள மறந்துவிட்டு, உடலை பலப்படுத்தும் மக்களிடையே, வனத்துறை அதிகாரிகள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...