தனியார் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு இறுதிகட்டத்தில் அரசு மருத்துவமனையை அணுகுவதே உயிர் பலிக்கு காரணம் - கோவை மாவட்ட ஆட்சியர்

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவிட்டு இறுதிகட்டத்தில் அரசு மருத்துவமனையை அணுகுவதே உயிர்பலிக்கு காரணம் என கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் குற்றம் சாட்டியுள்ளார்.

கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 20 பேரும், வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 190 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



இந்த நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் இன்று திடீர் ஆய்வினை மேற்கொண்டார். 

தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இன்று அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆய்வினை மேற்கொண்டேன். காய்ச்சல் வார்டுகளை பார்வையிட்டுள்ளேன். அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவ வசதி உள்ளது. மருத்துவர்கள், மருத்துவ கண்காணிப்பாளர்கள் மற்றும் உதவியாளர்கள் போதுமான அளவில் உள்ளனர்.

கோவை மட்டுமல்லாது நீலகிரி, நாமக்கல், திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மக்களும் இம்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



காய்ச்சல் காரணமாக இம்மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் பொதுமக்கள் தீவிர சிகிச்சையின் மூலம் காப்பாற்றப்பட்டு விடுகின்றனர். ஆனால், காய்ச்சல் ஏற்பட்டவுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவிட்டு உயிருக்கு ஆபத்தான நேரத்தில் மட்டும் அரசு மருத்துவமனையை அணுகும் போது பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகிறது.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கூறினார். 

மாவட்ட ஆட்சியரின் இந்த கருத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பொதுமக்களிடையே பீதியை உண்டாக்கியுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...