சிக்குன்குனியா நோயை குணப்படுத்த புதிய மருந்து கண்டுபிடிப்பு



சிக்குன்குனியா காய்ச்சலும் நுண்ணியிரிகளினால் பரவும் நோயாகும். நுண்ணியிர்கள் தொற்றிய ஏடிஸ் வகை கொசுக்களால் இந்நோய் பரப்பப்படுகிறது. நுண்ணுயிரிகளைக் கொண்ட கொசுக்கள் கடிக்கும்போது மனிதனுக்கு இந்நோய் உண்டாகிறது. அறிகுறிகள், உடலில் காணப்படும் மாற்றங்கள், ஆய்வகச் சோதனை, பாதிக்கப்பட்ட கொசுக்களால் கடிக்கப்பட்டிருக்கலாம் என்ற சாத்தியக் கூறுகள் ஆகியவற்றால் சிக்குன்குனியா காய்ச்சல் கண்டறியப்படுகிறது. 

சிக்குன்குனியாவுக்கு என்று தனிப்பட்ட மருத்துவம் எதுவும் கண்டறியப்படாமல் இருந்தது. இந்த நிலையில், இந்திய தொழில்நுட்ப கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், சிக்குன்குனியா நோயை குணப்படுத்துவதற்கான புதிய மருந்தை கண்டுபிடித்துள்ளனர். பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு பின்னர், பைப்பராஜென் என்ற மருந்தில் இருந்து இந்த மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து பேசிய உயிர்தொழில்நுட்பத்துறையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஷெய்லி தோமர் பேசுகையில், ஆண்டுதோறும் சிக்குன்குனியா நோயால் ஏராளமானோர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். தற்போது வரை சிக்குன்குனியாவுக்கு என்று தனிப்பட்ட மருத்துவம் எதுவும் இல்லை. அறிகுறிகளைக் கொண்டே நோய்ப் பராமரிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

இந்த நிலையில், சிக்குன்குனியா நோயை குணப்படுத்த பைப்பராஜென் என்ற மருந்தை கண்டுபிடித்துள்ளோம். இந்த பைப்பராஜென் மருந்தானது, மனிதர்களின் வயிற்றில் உள்ள குடற்புழுக்களை அகற்ற பயன்படுத்தப்படுகிறது. தற்போது, இந்த மருந்தை சந்தைகளில் அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக,  மருந்தின் மூலக்கூறுகளை விலங்குகளுக்கு செலுத்தி சோதனை செய்து பார்க்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...