சிக்குன்குனியா நோயை குணப்படுத்த புதிய மருந்து கண்டுபிடிப்பு



சிக்குன்குனியா காய்ச்சலும் நுண்ணியிரிகளினால் பரவும் நோயாகும். நுண்ணியிர்கள் தொற்றிய ஏடிஸ் வகை கொசுக்களால் இந்நோய் பரப்பப்படுகிறது. நுண்ணுயிரிகளைக் கொண்ட கொசுக்கள் கடிக்கும்போது மனிதனுக்கு இந்நோய் உண்டாகிறது. அறிகுறிகள், உடலில் காணப்படும் மாற்றங்கள், ஆய்வகச் சோதனை, பாதிக்கப்பட்ட கொசுக்களால் கடிக்கப்பட்டிருக்கலாம் என்ற சாத்தியக் கூறுகள் ஆகியவற்றால் சிக்குன்குனியா காய்ச்சல் கண்டறியப்படுகிறது. 

சிக்குன்குனியாவுக்கு என்று தனிப்பட்ட மருத்துவம் எதுவும் கண்டறியப்படாமல் இருந்தது. இந்த நிலையில், இந்திய தொழில்நுட்ப கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், சிக்குன்குனியா நோயை குணப்படுத்துவதற்கான புதிய மருந்தை கண்டுபிடித்துள்ளனர். பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு பின்னர், பைப்பராஜென் என்ற மருந்தில் இருந்து இந்த மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து பேசிய உயிர்தொழில்நுட்பத்துறையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஷெய்லி தோமர் பேசுகையில், ஆண்டுதோறும் சிக்குன்குனியா நோயால் ஏராளமானோர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். தற்போது வரை சிக்குன்குனியாவுக்கு என்று தனிப்பட்ட மருத்துவம் எதுவும் இல்லை. அறிகுறிகளைக் கொண்டே நோய்ப் பராமரிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

இந்த நிலையில், சிக்குன்குனியா நோயை குணப்படுத்த பைப்பராஜென் என்ற மருந்தை கண்டுபிடித்துள்ளோம். இந்த பைப்பராஜென் மருந்தானது, மனிதர்களின் வயிற்றில் உள்ள குடற்புழுக்களை அகற்ற பயன்படுத்தப்படுகிறது. தற்போது, இந்த மருந்தை சந்தைகளில் அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக,  மருந்தின் மூலக்கூறுகளை விலங்குகளுக்கு செலுத்தி சோதனை செய்து பார்க்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...