ராஜா கழுகுகளின் வரவால் அழகு கூடும் பவானிசாகர் அணையின் நீர்தேக்கம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை கிராமம் பகுதியில் பவானிசாகர் அணையின் நீர்தேக்கம் உள்ளது. இதனையொட்டி, கோவை வனப்பகுதிக்குட்பட்ட சிறுமுகை கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு பறவைகள் மற்றும் வனவிலங்குகள் வந்து செல்கின்றன. 

தற்போது, பவானிசாகர் அணையின் நீர்தேக்கத்தின் ஜுரோ பாயிண்ட் பகுதியில் சிவப்பு நிற தலையை கொண்ட ராஜா கழுகுகள் வருகை தந்துள்ளன. அதனை, பொதுப்பணித்துறையின் உதவி நிர்வாக பொறியாளர் நிதியன் புகைப்படம் எடுத்துள்ளார். அதில், ராஜா கழுகுகள், இறந்த மானின் உடலை  தின்று கொண்டிருந்தது பதிவாகியுள்ளது. 

கழுகுகளின் வருகையால் வளமான வனப்பகுதியை குறிக்கும் என்ற நிலையில், சுற்றுவட்டாரப்பகுதியான சத்தியமங்கலத்தின் மோயர் பள்ளத்தாக்கு, புலிகள் சரணாலயம் மற்றும் பிற பகுதிகளிலும் இவைகள் பெரிதும் காணப்படுகின்றன. மனிதர்களின் ஆதிக்கம் இல்லாத இந்த பகுதியில், பல்வேறு இடங்களில் இருந்து வரும் விலங்குகள் மற்றும் பறவைகளின் வரத்து அதிகரிக்கும் எனத் தெரிகிறது. 

பவானிசாகர் அணையின் நீர்தேக்கத்தில் தண்ணீரின் அளவால் இயற்கை எழிலகு பொழிந்து காணப்படும் வேளையில், வன விலங்குகளின் வருகையும் அதிகரிக்கிறது. ஏற்கனவே, யானைகள், மான்கள், காட்டெருமைகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளும், மாமிச உண்ணிகளான புலி, சிறுத்தை, மற்றும் செந்நாய் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் வந்த வண்ணம் உள்ளன. 

பல்வேறு விலங்குகளின் நடமாட்டத்திற்கு மத்தியில் ராஜா கழுகுகளும் முகாமிட்டுள்ளதால்,  பவானிசாகர் அணையின் நீர்தேக்கம் பகுதியை விரைவில் சுற்றுலாத் தளமாக மாற்ற வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். 

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...