மகளிர் சுயஉதவி குழுவினர்களால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யும் ஊர்தி சேவை கோவையில் துவக்கம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (செப்டம்பர் 6) மகளிர் சுய உதவிக்குழு பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், ஊட்டச்சத்து விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையிலும் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யும் நபார்டு நிதியுதவியின் மூலம் நடமாடும் விற்பனை ஊர்தியினை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தொடங்கி வைத்தார்.

இதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:-

தமிழக அரசு பொதுமக்களின் நலன்காக்க பல்வேறு சிறப்பு முயற்சிகளை எடுத்து வருகின்றது. கால மாற்றத்திற்கேற்றவாறு உணவு பழக்கங்களும் மாற்றம் பெற்றதோடு மனிதனின் ஆரோக்கியமும் குன்றி வருகின்றது. இன்று நிலவி வரும் வாழ்வாதார நோய்களை தவிர்க்கவும், உடல் நலத்தை காக்கவும் சிறுதானியம் சிறப்புணவாக இடம் பெறுகிறது.

மக்களின் உணவு பழக்கங்களை மாற்றம் செய்யவும், இழந்த ஆரோக்கியத்தினை மீட்டெடுக்கவும், சிறுதானியங்களான வரகு, சாமை, திணை, குதிரைவாலி ஆகிய மூலப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் காலை மதிய உணவு வகைகள் சத்துமாவு உள்ளிட்டவைகள் இந்த வாகனத்தின் மூலம் பொதுமக்களிடையே விற்பனைக்கு எடுத்துச்செல்லப்படுகின்றது. 

மேலும் பழங்களால் தயாரிக்கப்பட்ட பழரசங்கள், கேண்டிகள், காய்களை மூலப்பொருட்களாக கொண்டு தயாரிக்கப்படும் ஊறுகாய் வகைகள் மசாலப்பொடிகளும் விறப்பனை செய்யப்படுகின்றது. மகளிர் சுய உதவிக்குழுவினரால் விற்பனை செய்யப்படுவதால் பெண்கள் சுயசார்பு அடையும் வகையில் வேலைவாய்ப்புகள் வழங்கப்படுவதுடன், இயற்கை முறையில் வீட்டு முறைப்படி தயாரிக்கப்படுவதால் அனைவரும் விரும்புகின்ற உணவாகவும் கண்டிப்பாக இவை விளங்கும்.

இவ்வாகனத்தின் மூலம் விற்பனை செய்யும் இடங்களில் ஊட்டச்சத்து விழிப்புணர்ச்சியும், செயல் விளக்கமும் மற்றும் உணவியல் ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றது. 

இதற்கான சிறப்பு பயிற்சிகளும், வழிமுறைகளும் விற்பனையில் ஈடுபடும் மகளிர் சுயஉதவிக்குழுவினர்களுக்கு வழங்கப்படுகின்றது என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார். 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கனகராஜ், நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் வசீகரன், உணவியல் நிபுணர் சரஸ்வதி ஆகியோர் உள்ளனர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...