பழ மரச் சாகுபடியாளர்களுக்கு ஓர் அபாய எச்சரிக்கை

சமீபகாலமாக பழமரச் சாகுபடியாளர்கள் சாகுபடி செய்யும் கொய்யா, மாதுளை, எலுமிச்சைப் பயிர்களில் மறைந்திருந்து தாக்கும் எதிரியான நூற்புழுக்களின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. இத்தாக்குதலின் ஊற்றுக்கண் சாகுபடியாளர்கள் வாங்கும் நாற்றுக்களின் மூலமே இந்த எதிரிகள் தோட்டத்தில் எளிதில் உட்புகுகின்றன. எனவே இந்த நூற்புழுக்களின் தாக்குதலைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியமாகும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:-

பழமர நாற்றுக்கள் பெரும்பாலும் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தோ அல்லது அண்டை மாநிலங்களில் இருந்தோதான் பெறப்படுகின்றன. பெரும்பாலும் விவசாயிகள் நேரில் சென்று பழமர நாற்றுக்களை வாங்குவதில்லை என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

இடைத்தரகர்கள் மூலமாகவோ அல்லது முகவர்கள் மூலமாகவோ தான் இந்த வியாபாரம் நடைபெறுகின்றது. அவர்களுக்கு நாற்றுக்கள் மூலம் புதிய பகுதிகளுக்குக் கடத்தப்படும் நூற்புழுக்கள் பற்றிய தெளிவு இல்லை, இருந்தாலும் அதுபற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை.



விவசாயிகளும் இதைப் பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை. நூற்புழு தாக்கிய நாற்றுக்களை நட்டு அவை சில வருடங்கள் கழித்துப் பெரிய பாதிப்பையும் மகசூல் இழப்பையும் ஏற்படுத்தும் போதுதான் விழிப்படைகின்றனர். இது தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் கதையாகும். வருமுன்னர்க் காத்தல் என்னும் தாரக மந்திரம் நமது உடல் நோய்களுக்கு மட்டுமின்றி வேளாண் செயல்பாடுகளுக்கும் பொருந்தும்.

எனவே உழவர் பெருமக்கள் நாற்றுக்களை வாங்கும்போது நேரில் சென்று ஓரிரு நாற்றுக்களைப் பிடுங்கி வேர்களில் சிறிய வேர்முடிச்சுகள் உள்ளதா என ஆராய்ந்து பின்னர் நாற்றுக்களை வாங்கிப் பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.



மேற்கண்ட தகவலை கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக நூற்புழுவியல் துறைப் பேராசிரியர் மற்றும் தலைவர் சுப்பிரமணியன் மற்றும் பூர்ணிமா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...