வால்பாறை பகுதியில் மூன்றாவது நாளாக குடியிருப்புகளை சேதப்படுத்திய யானைகள்- பொது மக்கள் பீதி

வால்பாறை அடுத்த தமிழக அரசுக்கு சொந்தமான சின்கோனா எஸ்டேட்டில் உள்ள குடியிருப்பு பகுதியில் நேற்று நாள்ளிரவில் நுழைந்த பத்திற்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வாசுதேவன் மற்றும் ரோஸி என்ற தொழிலாளிகளின் வீட்டின் கதவுகளை உடைத்து அங்கிருந்த பொருட்களை சூறையாடியது.

இதனைத்தொடர்ந்து, சத்தம் கேட்டு தூக்கத்தில் இருந்த எழுந்த குடும்பத்தினர் பின் வாசல் வழியாக வீட்டை விட்டு வெளியேறி கூச்சலிட்டுள்ளனர். உடனே அங்கு விரைந்து வந்த அக்கம் பக்கம் வீட்டினர் தீ பந்தம் கொளுத்தியும், கூச்சலிட்டும் யானைகளை விரட்டியுள்ளனர்.



ஆனாலும், அந்த காட்டு யானைகள் அருகே உள்ள வனப்பகுதிக்குள் சென்று அங்கேயே முகாமிட்டுள்ளது.

மேலும் வால்பாறைக்கு உட்பட்ட கல்யாணபந்தல், நல்லமுடி, ஜெகமுடி உள்ளிட்ட பல்வேறு எஸ்டேட்டின் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் யானைகள் முகாமிட்டுள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர்.



இந்நிலையில் நல்லமுடி சுற்றுலாபகுதியான காட்சிமுனை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல இன்று மூன்றாவது நாளாக வனத்துறையினர் தடைவிதித்துள்ளனர்.

இதனிடையே, வால்பாறை எஸ்டேட் பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை வனத்திற்குள் விரட்ட கும்கி யானைகளை வரவழைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...