அனைத்துக் கட்சி பிரமுகர்களுடன் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆலோசனை

ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் திருத்தம் செய்து வருகிறது. இதற்கான சுருக்க திருத்தப்பணி ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் நடைபெறும். முதலில் அதன் வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிடும். அந்த வகையில், கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.



அதில், 14 லட்சத்து 20 ஆயிரத்து 408 ஆண் வாக்காளர்களும், 14 லட்சத்து 40 ஆயிரத்து 845 பெண் வாக்காளர்களும், 283 மூன்றாம் பாலினத்தினரும் இடம் பெற்றுள்ளனர். 

இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் பார்வையாளர்/ சமூக பாதுகாப்புத்துறை ஆணையர் ஆர்.லால்வணோ, அனைத்துக் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில், ஆட்சியர் ஹரிஹரன், மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளர் காந்திமதி, கோட்டாட்சியர்கள் மதுராந்தகி, ஆர்.சின்னசாமி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...