வால்பாறையில் தீபாவளி போனஸை உயர்த்தி வழங்கக் கோரி எஸ்டேட் தொழிலாளர்கள் சாலை மறியல்

வால்பாறை பகுதியில் உள்ள ஜெய்ஸ்ரீ நிறுவனத்திற்கு சொந்தமான சோலையார், முதல்பிரிவு மற்றும் 2வது பிரிவு, மூன்றாவது மற்றும் கல்லார், ஈட்டியார், ஆகிய எஸ்டேட்டில் சுமார் 700- க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 



இந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு வருடந்தோறும் தீபாவளி போனஸ் வழங்கப்படும். போனஸ் வழங்குவதில் தொழிலாளர்களுக்கு, அவர்கள் பணிபுரியும் எஸ்டேட் பகுதியில் உள்ள அலுவலகத்தின் தகவல் பலகையில் தகவல் தெரிவிப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு தொழிலாளர்களுக்கு முன்னறிவிப்பு கொடுக்காமலேயே இன்று (அக்.,07) போனஸ் பெறுவதற்கான போனஸ் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. 



அதில், 9.5 சதவீதம் போனஸ் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால், அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் உடனே எஸ்டேட் அலுவலகத்திற்கு முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். சோலையார் எஸ்டேட் 2வது பிரிவை சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிக்கு செல்லாமல் தொழிற்சாலைக்கு முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.  அப்போது அவர்கள் கூறுகையில், எங்களுக்கு குறைந்தபட்ச போனஸ் குறித்து சில தொழிற்சங்க தலைவர்கள் மட்டுமே கையொப்பம் செய்திருந்ததால், நிர்வாகத்தை கண்டித்து, 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டதாகத் தெரிவித்தனர். 

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறை இளம் ஆய்வாளர் சாலை மறியலில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் சமரசம் பேசினார். மேலும், நிர்வாகத்தை அழைத்து பேசுவதாக கூறியதன் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால், வால்பாறையிலிருந்து முடீஸ், சோலையார் அணை, பன்னிமேடு செல்லும் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...