வால்பாறையில் தீபாவளி போனஸை உயர்த்தி வழங்கக் கோரி எஸ்டேட் தொழிலாளர்கள் சாலை மறியல்

வால்பாறை பகுதியில் உள்ள ஜெய்ஸ்ரீ நிறுவனத்திற்கு சொந்தமான சோலையார், முதல்பிரிவு மற்றும் 2வது பிரிவு, மூன்றாவது மற்றும் கல்லார், ஈட்டியார், ஆகிய எஸ்டேட்டில் சுமார் 700- க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 



இந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு வருடந்தோறும் தீபாவளி போனஸ் வழங்கப்படும். போனஸ் வழங்குவதில் தொழிலாளர்களுக்கு, அவர்கள் பணிபுரியும் எஸ்டேட் பகுதியில் உள்ள அலுவலகத்தின் தகவல் பலகையில் தகவல் தெரிவிப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு தொழிலாளர்களுக்கு முன்னறிவிப்பு கொடுக்காமலேயே இன்று (அக்.,07) போனஸ் பெறுவதற்கான போனஸ் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. 



அதில், 9.5 சதவீதம் போனஸ் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால், அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் உடனே எஸ்டேட் அலுவலகத்திற்கு முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். சோலையார் எஸ்டேட் 2வது பிரிவை சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிக்கு செல்லாமல் தொழிற்சாலைக்கு முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.  அப்போது அவர்கள் கூறுகையில், எங்களுக்கு குறைந்தபட்ச போனஸ் குறித்து சில தொழிற்சங்க தலைவர்கள் மட்டுமே கையொப்பம் செய்திருந்ததால், நிர்வாகத்தை கண்டித்து, 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டதாகத் தெரிவித்தனர். 

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறை இளம் ஆய்வாளர் சாலை மறியலில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் சமரசம் பேசினார். மேலும், நிர்வாகத்தை அழைத்து பேசுவதாக கூறியதன் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால், வால்பாறையிலிருந்து முடீஸ், சோலையார் அணை, பன்னிமேடு செல்லும் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...