இந்தியாவில் அடியெடுத்து வைக்கும் ”ஆடி ஏ5” பிராட்பேக்

ஆடி இந்தியா நிறுவனம் ஏ5 ரகத்தில் 3 புதிய மாடல் கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஏ5 ஸ்போர்ட்பேக், ஏ5 கேப்ரியோலெட், எஸ் 5 ஸ்போர்ட்பேக் என்ற சொகுசு கார்களை வெளியிட்டுள்ளது.



இந்த கார்களின் விலை முறையே ரூ.54.02 லட்சம், ரூ.67.15 லட்சம், ரூ.70.60 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஏ5 ஸ்போர்ட்பேக், ஏ5 கேப்ரியோலெட் ரகமும் இந்தியாவுக்கு புதிதாக அறிமுகமாகும் மாடல்கள் எனவும், எஸ் 5 மட்டும் அப்கிரேட் செய்யப்பட்ட ரகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



புதிதாக மேம்படுத்தப்பட்ட சஸ்பென்ஷன், உயர் செல்திறன்மிக்க ஓட்டங்கள், புதுமை படைக்கும் பொழுதுபோக்கு அம்சத்துக்கான தீர்வுகள், வீர்ச்சுவல் காக்பிட் மற்றும் ஆடி இன்டர்பேஸ் மொபைல்போன் போன்ற சிறப்பம்சங்களுடன் இந்தக் கார்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 



ஆடி இந்தியாவின் தலைவர் ரகில் அன்சாரி கூறுகையில், ஆடியின் மறுகட்டமைப்பு ஆண்டாக 2017 உள்ளது. ஏ5 வகை இந்த புதிய சகாப்தத்தின் துவக்கம். புதிய மாடல், புதிய பிரிவுகளில் அறிமுகப்படுத்தி இந்தியாவில் சொகுசான ஒரு பயணத் தீர்வை உருவாக்கின்றனர்.  ஏ5 ஸ்போர்ட்பேக், ஏ5 கேப்ரியோலெட், எஸ் 5 ஸ்போர்ட்பேக் போன்ற கார்களை அறிமுகம் செய்வதன் மூலம் இந்தியாவில் 2017-ல் எங்களது அறிமுக இலக்கான 10 எண்ணிக்கையை எட்டி விட்டோம்.  என்றார். 



ஆடி கோயம்புத்தூர் முதன்மை டீலர் அனந்தகிருஷ்ணன் பேசுகையில், ஆடி ஏ5 இந்த மண்டலத்தில் சந்தைப்பங்கினை அதிகரிக்கும். அனைவரும் ஆவலுடன்  இந்த ஆண்டில் எதிர்பார்க்கப்பட்ட தயாரிப்பு தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...