பொதுக் கழிவறை வசதிகள் இல்லாத வார்டு மக்கள் அதிகாரிகளை அணுக வேண்டும் - மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

திறந்த வெளி மலம் கழிப்பதை தடுப்பதற்காக மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பொதுக் கழிப்பிட வசதியை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.  மேலும், நூறு வார்டுகளிலும் 100 சதவீத திறந்த வெளி மலம் கழிப்பதை தடுப்பதற்காக துண்டுபிரசுங்கள் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. இதன் பலனாக, பொதுமக்கள் மாநகராட்சியால் கட்டப்பட்ட பொதுக் கழிப்பறையை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். 

இந்த நிலையில, காமராஜபுரம், லைட் ஹவுஸ் சாலை, சுப்ரமணிய சாலை, குனியமுத்தூர், சுந்தராபுரம், குறிச்சி, கோவைபுதூர், குனியமுத்தூர், சொக்கம்புதூர், செட்டிவீதி உள்ளிட்ட பகுதிகளில் இன்னும் திறந்த வெளியில் மக்கள் மலம் கழிக்கின்றனர். இதனை தடுக்கும் வகையில், திறந்த வெளியில் மலம் கழிப்பவர்களுக்கு ரூ.600 அபராதம் விதித்து மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.  

மேலும், நகரில் பொதுக் கழிவறை வசதிகள் இல்லாத மக்கள் அந்தந்த வார்டு அதிகாரிகளை அணுகி, பொதுக்கழிப்பறை செய்து தரக் கோரி மனு அளிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். 

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...