ஸ்ரீ ராமகிருஷ்ண மருத்துவமனை சார்பில் இரத்ததானம் அமைப்பாளர்களுக்கு பாராட்டு விழா

ஒவ்வொரு ஆண்டும் தேசிய தன்னார்வ இரத்ததானம் தினம் அக்டோபர் முதல் நாள் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் ஸ்ரீ ராமகிருஷ்ண மருத்துவமனையின் ட்ரான்ஸ்ப்யூஷனால் மெடிசின் துறை சார்பில் தன்னார்வ இரத்த தானம் செய்பவர்கள், இரத்த கொடையாளர்கள், ஒற்றை தானம் ப்ளேட்லெட் கொடையாளர்கள், என்.எஸ்.எஸ் ஒருங்கிணைப்பாளர்கள், தன்னார்வ இரத்த கொடையாளர்கள் ஸ்ரீ ராமகிருஷ்ண மருத்துவமனையில் இரத்த வங்கிக்கான அயராது பணியாற்றிய ஆர்வலர்கள் ஆகியோருக்கு பாராட்டு விழா நடத்தியது.

அந்த வகையில் இந்த ஆண்டு நடந்த பாராட்டு விழாவில் எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை இயக்க அதிகாரி வி.ராமகிருஷ்ணா தலைமை விருந்தினராக பங்கேற்றார். தலைமை நிர்வாக அதிகாரி ராம் குமார், மருத்துவர் சுகுமாரன், மருத்துவ தலைவர் ஐசக் கிரிஸ்டியன் மோசஸ் மருத்துவ இயக்குனர் செந்தில் குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், 50-க்கும் மேற்பட்ட இரத்த தானம் அமைப்பாளர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.



இரத்ததானம் அதிகமாக செய்த அருள் கோகுல் தாஸ், கலந்துகோண்டு நன்கொடை மற்றும் இரத்தம் தொடர்பாக பொது மக்களுக்கு விழிப்புணர்வு இல்லாமை குறித்து பேசினார். 

நோய்தடுப்பு இரத்தவியல் & ட்ரான்ஸ்ப்யூஷனால் மருத்துவ ஆலோசகர் ஸ்ரீதர் கோபால் பேசுகையில், மாணவர்கள் ஊக்கப்படுத்துதல் மற்றும் அவர்களை தன்னார்வ ரத்த தான ஊக்குவிப்பதில் இரத்த கொடை அமைப்பாளர் பங்கேற்போடு, இரத்த தானம் குறித்து எண்ணங்கள் பகிர்வு, முக்கியத்துவம் மற்றும் ஒற்றை தானம் ப்ளேட்லெட் தேவை. பிளாஸ்மா பரிமாற்றம் (TSA), மற்றும் மருத்துவமனையில் இரத்த தேவையை வலியுறுத்தினார். மருத்துவமனைகள் மற்றும் இரத்த வங்கிகள் எதிர்வரும் தேவைகளுக்கு இரத்த நன்கொடை எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். என்றார்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...