செயற்கை பஞ்சு நூலின் மீதான வரியினை குறைத்துள்ளது ஜவுளித்துறைக்கு பயனளிக்கும்- சைமா

செயற்கை பஞ்சு மற்றும் நூலின் மீது 18 சதவிகித சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்பட்டிருந்தது. அதே நேரத்தில் துணிக்கு 5 சதவிகித வரி விதிக்கப்பட்டு உள்ளீட்டு வரி எடுப்பது அனுமதிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக செயற்கை பஞ்சு மற்றும் நூல் தயாரிப்பாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

இதனைத்தொடர்ந்து, செயற்கை பஞ்சு நூல் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை 18 சதவிகிதத்தில் இருந்து 12 சதவிகிதமாக குறைக்க வேண்டும் என்று சைமா உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் கோரிக்கை விடுத்து வந்தது.

இதனிடையே, தற்போது செயற்கை பஞ்சு நூலின் மீதான ஜிஎஸ்டி வரியை 18 சதவிகிதத்தில் இருந்து 12 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளதற்கு சைமா பாராட்டுக்கள் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் தலைவர் பி.நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணியின் சீரிய முயற்சிக்கு பாராட்டுக்கள். அவர் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக செயற்கை நூல் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை 18 சதவிகிதத்தில் இருந்து 12 சதவிகிதமாக குறைப்பதாக ஜிஎஸ்டி கவுன்சில் தனது 22-வது கூட்டத்தில் அறிவித்துள்ளது.

இந்த வரி குறைப்பு நூற்பாலைகள் மற்றும் விசைத்தறி உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதோடு உலகளவில் நமது ஜவுளி உற்பத்தி பொருட்கள் போட்டியிட வசதி செய்யும். மேலும், ஏழை மக்களுக்கு நியாயமான விலையில் துணி கிடைக்கும் என்று சைமா தலைவர் பி.நடராஜன் தெரிவித்துள்ளார்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...