மாநகரில் இரு சக்கர வாகனங்களை திருடி வந்த வாலிபர்கள் கைது

கோவை மாநகர் பகுதிகளில் கடந்த பல நாட்களாக இரு சக்கர வாகன திருட்டு அதிகரித்து வருகிறது. தொடர் புகார்களின் அடிப்படையில் போலீசார் இரு சக்கர வாகன கொள்ளையர்களை தேடி வந்தனர். தொடர்ந்து, இருசக்கர வாகன கொள்ளையர்களை பிடிக்க 6 பேர் அடங்கிய தனிப்படை போலீசார் நியமிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டுவந்த இரு வாலிபர்களை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த தனிப்படை போலீசார், சுங்கம் ரவுண்டானா பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த இரு வாலிபர்களை போலீசார் விசாரித்தனர். அப்போது முறையான ஆவணங்களின்றி இரு சக்கர வாகனங்களை இயக்கியது தொடர்பாக போலீசார் கேள்வி எழுப்பினர். அப்போது முன்னுக்கு பின் முரணான பதில் அளித்த வாலிபர்கள் மீது சந்தேகம் ஏற்படவே போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

விசாரணையில் அவர்கள், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த ரஞ்சித்குமார் (24) மற்றும் உக்கடம் பக்தியைச் சேர்ந்த ரியாசுதீன் (23) என்பதும், கோவையில் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த நான்கு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...